Wednesday, October 13, 2010

நான் பாசாயிட்டேன்.....

தமிழ் இரண்டாம் தாள்:

 மீண்டும் ஒரு தொடர்பதிவு அழைப்பு கட்டுரை:
http://ambikajothi.blogspot.com/2010/08/blog-post_17.html
சொல்லத்தான் நினைத்து அழைத்தவர்:  அம்பிகாஜோதி
தொடர்பதிவு தலைப்பு:   "என் பள்ளி ஆண்டு விழா அனுபவங்கள்"
(இரண்டு பக்கங்களுக்கு மிகாமல் எழுதவும் ----  Essay/composition)

முன்னுரை :
நான் படித்தது,  Girls only பள்ளி.    கட்டுப்பாட்டுடன் உள்ள  ஒரு கான்வென்ட்.   ஆனால்,  எனக்கும் என் தோழிகளுக்கும்  - நாங்கள் பட்டாம் பூச்சிகளாய் சந்தோஷமாக சிறகடித்த நந்தவனம்.    சில ஆசிரியைகளுக்கு, நான்  செல்லப் பிள்ளை - எனது சுட்டித்தனம் அவர்களுக்கு மிகவும் பிடித்து சிரிப்பார்கள்.   பல முறை  என்னிடமே,  " உன் கிட்ட பேசினால் டென்ஷன் ஓடியே போய்டும்," என்பார்கள்.  ஆனால்,  இந்த "புரிதல்" எல்லாருக்கும் இருந்ததில்லை.   ஹி,ஹி,ஹி,ஹி...... ஏனென்றால்,  மற்றவர்கள்  எல்லாம் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு - ஸ்ட்ரிக்ட்டு - ஸ்ட்ரிக்ட்டு!  அந்த  ஸ்ட்ரிக்ட்டு  ஆசிரியைகளின்   வகுப்பில்,  நான்  பெஞ்ச் மேல  உட்கார்ந்து இருந்த நாட்களை விட பெஞ்ச் மேல நின்று கொண்டிருந்த நாட்கள் அதிகம்.  அப்பொழுதுதான், விஷயங்களை எல்லாம் ஒரு "Bird's view" வில் பார்க்க பழகி கொண்டேனோ?  ஹா,ஹா,ஹா,ஹா.... இருக்கலாம்.  

 முன்னோட்டம்:  
நான் ஒன்பதவாது படிக்கும் போது (?!),    ஆசிரியை பாடம் நடத்தி கொண்டு இருந்த பொழுது,  இன்னொரு தோழியுடன் சேர்ந்து  "பொட்டு வெடி" வெடித்த 'தீவிரவாத' குற்றத்துக்காக,  எங்களை  assembly கிரௌண்ட்ல,  தேசியகொடிக் கம்பத்தின் கீழ் ஒரு மணி நேரம் முழங்கால் போட வைத்ததும்,  நாங்கள் மாறி விட்டோம் - ஆம் -  பொட்டு வெடியில் இருந்து,   உடைந்து போன பலூன் துண்டுகளில் bubble  செய்து பாப் பண்ணுவது  போன்ற  - decent  கட்சிக்கு மாறி விட்டோம்.  பின்னே - எங்களை காட்டி கொடுத்த - எங்கள் விரல்களில் இருந்த "பொட்டு வெடி" (cap வெடி) வாசனையை குற்றமா சொல்ல முடியும்?  

தொடர்பதிவு மேட்டர்:  
  பள்ளி ஆண்டு விழா நேரங்களில் பட்டையை கிளப்பி விடுவோமே!  அதில் குறிப்பிட்ட ஒரு  ஆண்டு விழா  -  மறக்க முடியாத நிகழ்ச்சிகளில் ஒன்றாகும்.   எனது தோழிகளுள்  ஒருத்தி, இன்னும் ஐந்து மாணவிகளுடன் சேர்ந்து ஏதோ ஒரு பாடலுக்கு குரூப் டான்ஸ் ஆடுவது என்று முடிவு செய்தாள்  - மூன்று பேர் - தாவணி அணிந்து  பவித்ர பெண்கள்  லுக் - மூன்று பேர் - ஜீன்ஸ் - டி ஷர்ட் போட்டு கூல் guys லுக் என்று முடிவு எடுத்து கொண்டார்கள்.  பத்து நாட்களில் practice செய்து கொள்ள வேண்டும் என்ற ஏற்பாடு. 

ஏதாவது  ஒரு காரணத்தால்,  ஒவ்வொரு நாளும் இவர்களது practice session தள்ளிப் போய் கொண்டே இருந்தது.  என் தோழி, சளைக்காமல்  எப்படியாவது சமாளித்து விடுவோம் என்று மற்றவர்களை உற்சாகப் படுத்தி கொண்டே இருந்தாள்.  Rehearsal நாளும், நிகழ்ச்சிக்கு ஒரு நாள் முன் வந்தது.  மேடையில் ஆசிரியைகள் ஆடி காட்டச் சொன்னார்கள்.  சொதப்பி விடுவார்கள் என்று புரிந்து கொண்ட தோழி, அவர்களிடம் போய்  பேசி பேசி - எப்படியோ தனது நடனக் குழுவை எஸ்கேப் ஆக வைத்து விட்டாள்.  சமத்து பொண்ணு.  என் தோழி ஆச்சே!

 எல்லோரும், அவர் அவர் நிகழ்ச்சிக்கு அணிய வேண்டிய உடைகளை எடுத்து வரவும், நிகழ்ச்சி  அன்று மதியம் கிளாஸ்க்கு போகாமல், ' ஸ்பெஷல் permission '   வாங்கி மூன்று மணி நேரம் பயிற்சி  செய்வது என்று முடிவு செய்து மற்றவர்களிடம் சொல்லி அனுப்பினாள்.  மறுநாள்  வந்து பார்த்தால், இவளை தவிர மற்ற ஐவரையும் காணோம்.  ஐந்து லீவ் லெட்டர்ஸ் வந்து டீச்சர் மேஜையில் இருந்தன.  எல்லாமே, "As I am suffering from fever ....." என்று தான் இருந்தன. 

அவளுக்கு செம கோபம். இப்படி கவுத்துட்டாங்களே என்று.   என்னிடம் வந்து விஷயத்தை சொன்னாள். எப்படியாவது,  அன்று மாலையில் ஆடி - நல்ல பெயர் வாங்கி,  அவர்களை கடுப்படிக்க  வேண்டும் என்று முடிவோடு - இல்லை, வெறியோடு  இருந்தாள்.    கழுதை தேய்ந்து கட்டெறும்பு ஆனது போல -  குரூப் டான்ஸ் ஐடியா தேய்ந்து டூயட் ஆனது.

அப்படி இப்படி பேசி,  என்னை மேடையில் ஏற்றுவது என்று - அவர்களை பழி வாங்கும் எண்ணமாக என்னை "பலி " வாங்க கேட்டாள்.  என்ன இருந்தாலும், என்னோடு சேர்ந்து வகுப்பில் நல்லது (லூட்டி) , கெட்டது (punishment) எல்லாவற்றிலும் பங்கு போட்டவள் ஆயிற்றே - நம்ம நல்ல மனசு , சரி சொல்ல வைத்தது.  ஆனால், ஒரு நிபந்தனையுடன்.  நான் பவித்ர பெண் லுக்  தான். அதில் மாற்றம் இல்லை.  அவளுக்கென   கொண்டு வந்து இருந்த தாவணி செட் -  என் கைக்கு மாறியது.  இப்பொழுது, அவளுக்கு ஒரு ஜீன்ஸ் மற்றும் டி ஷர்ட்க்கு வழி பண்ண வேண்டும்.  ஹாஸ்டல் வாழ்  தோழி ஒருத்தி , ஜீன்ஸ் கொடுத்து உதவினாள்.  

ஆனால்,  கூல் guy லுக் கொடுக்க வேண்டிய டி-ஷர்ட் அங்கே எப்படி இருக்கும்?   (நாங்க எல்லாம் நல்லவங்க!)  எல்லாம் girlie shirts.  டி ஷர்ட் வேட்டையில் இருந்த நேரத்தில், எங்கள்  so called practice நேரம் கரைந்து கொண்டு இருந்தது.  பள்ளி நேரம் முடியும் வரை,  பள்ளிக்கு வெளியே போக முடியாது.  பாவம், நாங்க!   நிகழ்ச்சிகள்  ஆரம்பிக்க சிறிது நேரம்  இருந்த போது,    பாரத நாட்டியம் ஆட இருந்த ஒரு சீனியர்  மாணவிக்கு,  மல்லிகை பூ சூடி அலங்கரித்து கொள்ள தேவைப்பட்ட   பூவுடன்,   அவங்க தம்பி  வந்து இருந்தாப்புல.   என் தோழியை விட  
இரண்டு /மூணு  இன்ச் தான்  உயரமாய்  இருந்தாப்புல.  மாணவிகள் மட்டும் உள்ள பள்ளிக்கு வருவதால்  அசத்தலாக ,   பயபுள்ள கூல் டி-ஷர்ட்ல -   வந்து இருந்தாப்புல.  ஹையா.......   இருவரும் முதலில் ஒரு ஹலோ சொன்னோம்.  பின், நிலைமையை சொன்னோம்.  நெளிந்தான்.  "ஷர்ட் கழட்டி கொடுத்து விட்டு, நான்  வெறும் பனியனுடன் எப்படி girls-only பள்ளியில் இருப்பேன்," என்ற நியாயமான கேள்வியை கேட்டாப்புல.  

"கொடுக்காவிட்டால், நிலைமை அதை விட அவனுக்கு மோசமாகி விடும், " என்று சும்மா புருடா விட்டோம்.   "அப்படி என்ன செய்வீங்க?" என்று திருப்பி கேட்குற அளவுக்கு வேலை செய்யாமல், அன்னைக்கு அவன் மூளையும், "As I am suffering from fever ...." என்று  லீவ் லெட்டர் கொடுத்து இருந்தாப்புல போல.  கேட்டு இருந்தால், ஒண்ணும் இல்லை - நாங்க சும்மா வெத்து வேட்டு தான் என்று தெரிந்து போய் இருக்கும்.   அன்னைக்கு அவன் யோசிக்கும் திறனை அடகு வைத்து விட்டு வந்ததால ....... எங்களுக்கு சாதகமா போச்சு..... டி-ஷர்ட் என் தோழியின் கைக்கு வந்தது.  பனியனுடன் ,  அந்த பாரி வள்ளல் ,   பள்ளியை விட்டு  சட் என  மறைந்து விட்டாப்புல.  முல்லைக்கு தேர் கொடுத்தான், அந்த  பாரி வள்ளல்.  அக்காவுக்கு மல்லிகைப்பூ கொடுக்க வந்து டி-ஷர்ட்  துறந்தான், இந்த பாரி.   ப்ச்.

எங்கள் நிகழ்ச்சி குறித்த அறிவிப்பு வந்தது.  ஒரு முறை கூட,  பயிற்சி எதுவும் செய்யவில்லை. அவள் ஒரு பக்கமாக இருந்து கையை காலை தூக்கி ஆடுவாள் - ஏதோ ரஜினி ஸ்டெப் மாதிரி போடுவாள் - நான் இன்னொரு பக்கமாக இருந்து தையா தையா என்று ஆட்டம் என்ற பெயரில் குதிப்பேன்.   திடீர் என்று,  அது solo டான்ஸ் அல்ல,    டூயட் பாட்டு  என்று நினைவுக்கு வரும். ஓடி வந்து, stage க்கு நடுவில் நின்று கொண்டு, இருவர் கைகளையும்  பிடித்து கொண்டு ஏதோ ஒருவரை ஒருவர் சுற்றி " ஆடி" கொள்வோம்.  

பாடல் சரியாக கூட கேட்கவில்லை.  ஒரே அலறல் - இரைச்சல்  சத்தம் தான் -  ஸ்பீக்கர் problem என்று அப்புறம் சொன்னார்கள்.  எனக்கு கேட்டதெல்லாம்,    தோழி  ஆடி கொண்டே - லீவ் லெட்டர் கொடுத்து விட்டு மாயமாய் மறைந்து போன சுந்தரிகளுக்கு கொடுத்த "அர்ச்சனைகள்"   தான்.  அவளின் "வசைபாட்டுக்குத்" தான்,  சத்தம் போட்டு சிரித்து கொண்டே ஆடிக் கொண்டு  இருந்தேன்.   ஒரு வழியாக மேடையை விட்டு இறங்கினால் - கீழே மாணவிகள் எல்லாம் "once-more" கேட்டு கொண்டு இருந்தார்கள்.  அவள் கோபத்திலும், நான் சிரிப்பிலும்  மேடை மீது ஏறி  மனம் போன போக்கில் ஆட்டம் போட்டது,  audience க்கு ஒரு சூப்பர் ஷோவாக மாறி இருந்து இருக்கிறது.   ஆளை விடுங்கம்மா என்று நாங்கள் அப்பீட்டு ஆகி விட்டோம்.  

மறு நாள், பள்ளிக்குள் நுழைந்தால்,  எங்கள் ஜூனியர்ஸ் சிலர் எங்களுக்கு "fans" ஆகி இருந்தார்கள்.  பலத்த வரவேற்பு.  வகுப்பில்,  அந்த ஐந்து மகாராணிகளும்,  தோழியை  பார்த்து ஞே என்று  விழித்தார்கள்.  மற்றவர்கள் ஏற்கனவே எங்கள் "ஆட்டத்தை" பற்றி சொல்லி  பில்ட் - அப் கொடுத்து விட்டு இருந்தார்கள்.    தோழி,  அவர்களிடம் போய், ஒரு "ருத்ர தாண்டவம்" ஆடினாளே - ஆஹா...... சூப்பர் performance.   அது பொட்டு வெடி அல்ல, சர வெடி.   தூள்! 

பிரச்சனை ஒன்றுதான்.    அதை அந்த ஐந்து பேர்களும் சமாளித்த விதம் வேறு - நாங்கள் அதை சமாளித்த விதம் வேறு - அவ்வளவுதான்! 
  

தெளிவுரை: 
Going back to the class studies,  அது என்னவோ தெரியலை, என்ன மாயமோ தெரியல - வகுப்பில் பேசாமல் ஒரு இடத்தில் அவ்வளவு நேரம் தேமே என்று சும்மா உட்கார்ந்து கொண்டு - கொட்டாவி விட்டுக் கொண்டு இருக்க எனக்கு பிடித்ததில்லை.   துருதுருனு இருக்கும்.   வீட்டில் அமைதி புறாக்களாக  இருக்கும் நானும் எனது தோழிகளும்,  வகுப்பு ஆரம்பிக்கவும்,  வால் முளைக்காத வானரங்களாக மாறி விடுவோம்.  எல்லாமே சின்ன புள்ளைக வேடிக்கை  விளையாட்டுக்கள்தான்.  ஆனால், வகுப்பிலோ பள்ளிக்கு வெளியிலோ எந்த வம்பு தும்புக்கும் போனது  இல்லை - ரவுடித்தனம்  செய்ததும்  இல்லை.  எல்லார் வீடுகளிலும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு!  ஸ்ட்ரிக்ட்டு! ஸ்ட்ரிக்ட்டு! 


ஒவ்வொரு ஆண்டு விழாவும் இப்படி ஏதாவது காமெடி நடக்கும்.   கலாட்டாவை  சொல்லிட்டு, கருத்து சொல்லலைனா, அது "வெட்டி பேச்சு"  பதிவாக இருக்காதே.
 
கருத்துரை:
அமெரிக்கா வந்த பின், ஒரு அமெரிக்க ஸ்கூல் டீச்சர் - Mrs.Vickie  என்பவரிடம் இதை பற்றி சொல்லிய பொழுதுதான், அவர் என்னிடம் பகிர்ந்து கொண்ட விஷயங்கள், என்னை ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது.

மாணவர்களில், இரண்டு விதமாம் - Verbal Thinkers and Visual Thinkers. 

Verbal Thinkers:  http://www.youtube.com/watch?v=TaIBHYgKZn4
பெரும்பாலும்,  மாணவர்கள் இந்த பிரிவினை சார்ந்தவர்கள்தான்  என்ற ஆய்வின் படி,   கல்வித்திட்டத்தில்,  கல்வி முறை அமுல் படுத்தப்பட்டுள்ளது.  Reading and Talking - பாடங்களை வாசித்தலும் - பின்  விளக்கமாக வார்த்தைகளில் சொல்லி கொடுத்தலும் - இத்தகைய மாணவர்களின் கவனத்தை ஈர்க்குமாம்.

Visual Thinkers :  http://www.youtube.com/watch?v=bOmUM0PgIao
 இந்த மாணவர்களுக்கு காட்சி/காணல் முறையே (exploring and explaining with visual aids)  கவனத்தை சிதற விடாமல் வைத்து இருக்க செய்யுமாம்.  அந்த வீடியோ பார்த்தால், புரியும்.    Verbal Teaching Methods, இவர்களுக்கு ஒத்து வராதாம்.  எளிதில் distract ஆகி விட்டு - கவனம் சிதறி,  Hyperactive ஆக வகுப்பு அறைகளில்   இருப்பார்களாம்.  உண்மையில்,  Verbal Thinkers மாணவர்களை விட இவர்கள் புத்திசாலிகளாம்.     இவர்களுக்கு ஏற்ற கல்வி முறை இருந்தால்,    இவர்கள் பெரிய அளவில் சாதிக்க பிறந்தவர்களாம்.

Mrs.Vickie  இன்  "ஆய்வு அறிக்கை" படி,    நான் இரண்டாம் வகையை சார்ந்த மாணவியாக  இருந்து இருக்கிறேனாம்.    அதனால் தான்,  அத்தனை ஆட்டம் போட்டும்,   ஒரு வாட்டி கூட பெயில் ஆகாமல்,   நல்ல மார்க் எடுத்து பாஸ் ஆகி வந்து இருக்கேனாம்.  நம்புங்க .... நம்புங்க .... இல்லைனா...... இல்லைனா .......
"இல்லைனா, என்ன செய்வ?"  என்று கேட்காதீங்க.... அப்புறம் ஏதாவது பில்ட்-அப் பதில் தான் தர வேண்டியது வரும். சும்மா.... ........ஹா,ஹா,ஹா,ஹா.... என்ன, போனா போகுதுன்னு  நம்பிட்டீங்களா?  ஓகே.... ஓகே....    நன்றிங்கோ.     எனக்கு ஏற்ற முறை படி,  கற்று தந்து இருந்தால்,  நானும் சாதித்து இருப்பேனாம்   - சே...... வடை, பாயாசம்,  அப்பளம் எல்லாம் போச்சே!    சரி, சரி, ரொம்ப சிரிக்காதீங்க - புரை ஏறிக்கப் போகுது.

முடிவுரை:
மக்களே, உங்கள் பிள்ளைகளுக்காவது , அவர்களுக்கு எந்த முறையில் படிப்பது எளிது  என்று தெரிந்து கொண்டு, அதன் படி கல்வி கற்று கொள்ள வீட்டிலாவது நீங்கள் கொஞ்சம் உதவி செய்யுங்கள்.  Visual Thinkers க்கு tuition எல்லாம் வேலைக்கு ஆவுறதில்லை.   எல்லோரையும் ஒரே   அச்சில் ஊற்றி,  ஒரே மாதிரி வடிவங்களாக  வார்த்து  எடுத்து வைக்க முடியாது.  


  

103 comments:

ஸ்ரீ.கிருஷ்ணா said...

film பார்த்த மாதிரி இருக்கு nice..

புவனேஸ்வரி ராமநாதன் said...

நல்லா என்ஜாய் பண்ணியிருக்கீங்க. படிக்க சூப்பரா இருந்துச்சு.

Athiban said...

சூப்பரா இருக்கு!!!

எல் கே said...

rombap perusa irukku padichitu varen

sathishsangkavi.blogspot.com said...

பள்ளி நாட்களில் அனுபவிச்சு வாழ்ந்து இருப்பீங்க போல....

அம்பிகா said...

சித்ரா ,
ஆண்டுவிழா அனுபவங்கள் அருமை

\\மாணவர்களில், இரண்டு விதமாம் - Verbal Thinkers and Visual Thinkers.\\
அழகா புரிய வச்சிருக்கீங்க .
நன்றி சித்ரா. தொடர்பதிவை சுவராஸ்யமா தந்ததுக்கு.

பாலா said...

காமெடியின் கடைசியில் என்ன ஒரு கருத்து. அக்கா, சூப்பர்.
நான் ஒரு தடவ இந்த மாறி ஏக்க சக்கம மாட்டிருக்கேன். உங்கள் பதிவு கொடுத்த
தைரியம், நானும் என் டான்ஸ் அனுபவத்த பகிர்ந்துக்கிறேன்,.. :D

ஜெயந்த் கிருஷ்ணா said...

நல்ல பகிர்வு சகோதரி...

சகோதரி தீபா என்னையும் இந்த தொடர் பதிவிற்கு அழைத்திருந்தார்கள்....

Anonymous said...

//நான் ஒன்பதவாது படிக்கும் போது (?!)//
அதே டவுட்டு தான் எனக்கும் ;)

//திடீர் என்று, அது solo டான்ஸ் அல்ல, டூயட் பாட்டு என்று நினைவுக்கு வரும். //
ஹா ஹா.. அப்போவாவது நினைவு வந்ததே.. இல்லாட்டி ஒரே ஸ்டேஜ்ல ரெண்டு டான்ஸ் ஆயிருக்கும் :)

//ஒருவரை ஒருவர் சுற்றி ஆடி //
மரம் மட்டும் மிஸ்ஸிங் அப்படித்தான :)

//எல்லோரையும் ஒரே அச்சில் ஊற்றி, ஒரே மாதிரி வடிவங்களாக வார்த்து எடுத்து வைக்க முடியாது.//
முடிக்கும் போது தத்துவத்தோட முடிச்சிட்டீங்களே சகோ! கலக்கல்

சி.பி.செந்தில்குமார் said...

சுவராஸ்யமான பதிவு.அப்பவே நீங்க லொள்ளு பார்ட்டியா?ம் ம் ம்.எனக்குப்பைடித்த வரிகள்>>>


எல்லோரையும் ஒரே அச்சில் ஊற்றி, ஒரே மாதிரி வடிவங்களாக வார்த்து எடுத்து வைக்க முடியாது. >>>>.

கலக்க்குங்க

Unknown said...

Hi akka,

Arumaiyaana katurai..Iam sure you enjoy the memories!!:)

ippo college poha aasaiya iruukuu!!

Dr.Sameena@

www.myeasytocookrecipes.blogspot.com

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

ஓ நீங்க ஸ்கூல், காலேஜ் எல்லாம் படிச்சிருக்கேன்களா? சொல்லவே இல்லை?

தமிழ் உதயம் said...

பிரச்சனை ஒன்றுதான். அதை அந்த ஐந்து பேர்களும் சமாளித்த விதம் வேறு - நாங்கள் அதை சமாளித்த விதம் வேறு - அவ்வளவுதான்! ///

உண்மை தான். நகைசுவையாக சொல்லப்பட்ட பதிவிலும், ஒரு நல்ல மெஸேஜ். ஏற்று கொள்ள வேண்டிய அம்சம்.

Vidhya Chandrasekaran said...

நல்ல கொசுவத்தி:)

லெமூரியன்... said...

அதெல்லாம் சரிதான்...
மேடைல ஆடி முடிச்சப்பறம் வேற எதுவும் நிகழ்ச்சி நடந்ததா???
ஏன்னா மேடை இடிஞ்சி போச்சுனா அப்புறம் நிகழ்ச்சி எப்டி நடக்கும்னு ஒரு சந்தேகம் :( :( :(

ஹை ஹை.......கேள்வி கேட்டு மடக்கி புட்டேன்ல. :) :)
வேதாளம் கேள்வி கேட்ருச்சு சித்து .....
பதில் சொல்லலைனா தலை வெடிக்கும் சொல்லிபுட்டேன் ஆமா
:) :)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

யெஸ் நீங்க பாஸ் .. அதும் பர்ஸ்ட்க்ளாஸா.. :)

தினேஷ்குமார் said...

தம்பிக்கு ஒரு விஷ்ஷஸ் கூட கிடையாதா

அருண் பிரசாத் said...

வழக்கம் போல கலக்கல் + Informative

இளங்கோ said...

பதிவு கலகலகல.

//எல்லோரையும் ஒரே அச்சில் ஊற்றி, ஒரே மாதிரி வடிவங்களாக வார்த்து எடுத்து வைக்க முடியாது. //
நச் வரிகள்.

பவள சங்கரி said...

ஆண்டு விழா லூட்டி பிரமாதம் சித்ரா....அதிலயும் ஒரு மெசேஜ் வேற.....அதுவும் மிக பயனுள்ள மெசேஜ்....திரும்பவும் சூப்பரு சித்ரான்னு நிரூபிச்சிட்டீங்க......

Jerry Eshananda said...

அந்த பொட்டுவெடி மேட்டர் ....ரசித்தேன்.சிறிய விஷயத்தைக்கூட பயனுள்ள விதமாக எழுதும் விதம் பிடித்திருக்கிறது.

Asiya Omar said...

thodar kathai poola irunthathu.final arumai.

thiyaa said...

சூப்பரா இருக்கு

சசிகுமார் said...

அதிகமாக தொடர்பதிவு எழுதிய சாதனை பெண்மணி என்ற அறிய பட்டத்தை உங்களுக்கு வழங்குகிறேன்

Jaleela Kamal said...

அப்படி ஆண்டு விழா குஜாலா , ரசித்து படிச்சேன் , பனியன் மேட்டர் , பாவம் அந்த பையன் /

கீழே டிஸ்கி பதிவு அருமை சித்ராஅ

ராஜ நடராஜன் said...

//அன்னைக்கு அவன் யோசிக்கும் திறனை அடகு வைத்து விட்டு வந்ததால ....... எங்களுக்கு சாதகமா போச்சு.....//

யாரு?....நாங்க...:)

ராம்ஜி_யாஹூ said...

பாளை பஸ் ஸ்டாண்டில் நிற்பது, ஐந்தாம் நம்பர் பஸ்ஸில் ஏறுவது குறித்து எல்லாம் இருக்கும் என நினைத்து வந்து ஏமாந்தேன்.

Chitra said...

இதற்கே பதிவு இம்பூட்டு நீளமாகி போச்சேன்னு இருக்கிறேன்... நீங்க வேற.... சும்மா தமாஷ் பண்ணாதீக!

RVS said...

// எல்லோரையும் ஒரே அச்சில் ஊற்றி, ஒரே மாதிரி வடிவங்களாக வார்த்து எடுத்து வைக்க முடியாது.//
என்னா ஒரு எண்டிங்கு.....

Madhavan Srinivasagopalan said...

//நாங்கள் மாறி விட்டோம் //

'change' is the one which never changes

ராஜ நடராஜன் said...

//பிரச்சனை ஒன்றுதான். அதை அந்த ஐந்து பேர்களும் சமாளித்த விதம் வேறு - நாங்கள் அதை சமாளித்த விதம் வேறு - அவ்வளவுதான்! //

Cool Point.

சைவகொத்துப்பரோட்டா said...

ஆண்டு விழா பாத்தாச்சு!!

ராஜ நடராஜன் said...

இந்தியர்கள் பெரும்பாலும் Visual characters என்றே நினைக்கிறேன்.அதனால்தான் புத்தகங்களை விட திரைப்படங்களின் ஆக்கிரமிப்பு அதிகம்.

உலகளவில் Visualization ல ஆண்கள் கெட்டி:)

Anonymous said...

நல்ல பதிவு சித்ரா

ஜெயந்தி said...

உங்க ப்ளாக்க பாக்கும்போதே தெரியுதே நீங்க இப்படித்தான் இருந்திருப்பீங்கன்னு. துறுதுறுன்னு இருக்கற பிள்ளைகள்தான் அறிவாளிகளாக இருப்பார்கள். சரியான சிரிப்பு.

ராமலக்ஷ்மி said...

பாஸாயிட்டீங்க, அதுவும் டிஸ்டிங்ஷனோடு:), என் பாராட்டுக்கள்!!

சுசி said...

என்ன அட்டகாசம்..

சமத்து சித்ரா..

அந்த டான்ஸ் வீடியோ லிங்க் குடுங்க..

Unknown said...

'கொஞ்சம் வெட்டிப் பேச்சா' இருந்தாலும், கடைசில ரெண்டு நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கீங்க!

ராஜேந்திரகுமார் பாத்திரங்களுக்கு அப்புறம் உங்க ஃப்ரண்ட்ஸ் தான் 'ஞே'ன்னு முழிச்சு இருக்காங்கன்னு நினைக்கிறேன் :)

Radhakrishnan said...

மிகவும் பயனுள்ள பகிர்வு. பல விசயங்களை தெரிந்து கொள்ள முடிந்தது. மேலும் படிப்பு பற்றியும் தெளிந்து கொள்ள முடிந்தது. நன்றி.

VELU.G said...

ஹ ஹ ஹ ஹ ஹ ஹா

நல்ல கமெடி

டி shirt ஐ திருப்பி கொடுத்தீங்களா இல்ல அடிச்சிட்டிங்களா பாவங்க அந்த பையன் ஹ ஹ ஹா

super

நான் மூனாவது வகைங்க நமக்கு சொல்லிக் கொடுத்தாலும் புரியாது visual இருந்தாலும் புரியாதுங்க

ஸாதிகா said...

கொசுவத்தி சூப்பர்

செல்வா said...

// நான் பெஞ்ச் மேல உட்கார்ந்து இருந்த நாட்களை விட பெஞ்ச் மேல நின்று கொண்டிருந்த நாட்கள் அதிகம்.//

உண்மைலேயே ரொம்ப நல்லவங்க நீங்க .., உண்மைய பேசுறீங்க ...!!

சௌந்தர் said...

முடிவுரை நல்லா இருக்கு....

Gayathri Kumar said...

Chitra, Katturai romba super. Sirithu sirithu vayiru valikkudhu! Super!

செல்வா said...

ஆண்டுவிழா இவ்வளவு சிரமப் பட்டா நடத்துநீங்க..
ஆனா நல்லா இருந்துச்சு ..!!

'பரிவை' சே.குமார் said...

ஆண்டுவிழா அனுபவங்கள் அருமை.

எஸ்.கே said...

ஆண்டு விழா அனுபவம் அருமையாக இருக்கு!

ராஜவம்சம் said...

சூப்பர்.

நான் இரண்டாவது ரகம் என்று நினைகிறேன் ஒன்னுமே சாதிக்கலையே!

Unknown said...

மலரும் நினைவுகள் அருமை சித்ரா.

வினோ said...

Super duper....

மாதேவி said...

ஆண்டுவிழா கலக்கல்.

ம.தி.சுதா said...

ஃஃஃஃஃபாடலுக்கு குரூப் டான்ஸ் ஆடுவது என்று முடிவு செய்தாள் - மூன்று பேர் - தாவணி அணிந்து பவித்ர பெண்கள் லுக் - மூன்று பேர் - ஜீன்ஸ் - டி ஷர்ட் போட்டு கூல் guys லுக் என்று முடிவு எடுத்து கொண்டார்கள். பத்து நாட்களில் practice செய்து கொள்ள வேண்டும் என்ற ஏற்பாடு. ஃஃஃஃ
சும்மா ஒரு கலக்கு கலக்கீட்டிங்க போல....

ராஜகோபால் said...

//சே...... வடை, பாயாசம், அப்பளம் எல்லாம் போச்சே! //

பரவா இல்ல லட்டு, பூந்தி, ஜிலேபி எல்லாம் கிடைக்கும்.

Gayathri said...

unga memories solrenutu super thagavala kadasila solliputeengale akka super...

as usual u rock

செல்ல நாய்க்குட்டி மனசு said...

சித்ரா , பதிவு மலையாள படம் பார்த்தது போல இருந்தது. ஜாலியா ஆரம்பிச்சு சீரியஸ் ஆக முடிந்தது. சூப்பர்

Menaga Sathia said...

very nice,enjoy ur post!!

Nithu Bala said...

nagaisuvayoda seithikalaai pakirvathu arumaya irukku...rombha arumaya irundhuchu..

Vishy said...

அருமையாக இருக்கு உங்கள் அனுபவமும் பகிர்ந்த தகவல்களும்..

சித்ரா - in that பவித்ர பொண்ணு look photo இருந்தா upload பண்ணுங்களேன்..

நட்புடன் ஜமால் said...

சூப்பர் சூப்பர் சித்ரா

3ஆவது ரகம் மாணவர்களும் இருந்தார்கள்

தனக்கே உதவிகொள்ளாத தத்தி என்னை போல ...

மோகன்ஜி said...

நெனச்சேன் அப்பவே! குறும்பு பார்ட்டியாஹ்தான் சித்ரா இருந்திருக்கணும்னு. சுவாரஸ்யமான பதிவு.

சாந்தி மாரியப்பன் said...

டூயட்.. கற்பனையில் நினைச்சுப்பார்க்கவே லகலகன்னு இருக்கு :-))))

க ரா said...

Good one.

Prathap Kumar S. said...

என்ன மலரும் நினைவுகளா? நீங்க காலேஜ்ல் எப்படி இருந்திருப்பீங்கன்னு நீங்க சொல்லித்தான் தெரியனுமா? உங்க பதிவுகளே போதுமே....:))

வேலன். said...

பசுமை நிறைந்த நினைவுகள்..அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியுமா?

அருமை சகோதரி...
வாழக் வளமுடன்.
வேலன்.

curesure Mohamad said...

என்ன மந்திரம் வச்சிருக்கீங்க ?..எல்லாரும் உங்களுக்கு பின்னூட்டம் எழுதி தள்ளுகிறார்கள் ..பின்னோட்டம் இல்லாத சோகத்தில் வாடும் நண்பன்
http://ayurvedamaruthuvam.blogspot.com/

வருண் said...

***ஆசிரியை பாடம் நடத்தி கொண்டு இருந்த பொழுது, இன்னொரு தோழியுடன் சேர்ந்து "பொட்டு வெடி" வெடித்த 'தீவிரவாத' குற்றத்துக்காக,***

இதெல்லாம் அநியாயம்! ஒரு லச்சுமிவெடி, அணுகுண்டு, அல்லது ஆயிரம் வாலா வெடிச்சு இருந்தாலாவது பரவாயில்லை! சாதாரண பொட்டுவெடிக்கு தண்டனையா? என்ன அராஜகம்?னு உங்களுக்கு இதில் நியாயம் இல்லாதமாதிரித்தான் தெரிந்து இருக்கும் 9 ம் வகுப்பில்! :)))

***

visual person and verbal person are fine. But the problem in US is that they put the "kids" in drugs for any damn thing! I think I was a hyperactive kid and I must have had ADD problem as well. Luckily I did not born in US during this time! I am sure, they would have prescribed "Prozac" for me as they dont want to deal with even "simple problems" without drugs in the modern world!

பன்னிக்குட்டி ராம்சாமி said...

9ம் வகுப்பு படிக்கும்போதே பொட்டு வெடி? ம்ம்ம், பட் உங்க நேர்மை எனக்கு புடிச்சிருக்கு!

Gnana Prakash said...

Arumai...

Jayanthy Kumaran said...

very interesting...enjoyd this post with visual feel...great Chitra...! U r rocking ...

Tasty Appetite

Mahi_Granny said...

visual thinker சித்ராவிற்கு வாழ்த்துக்கள் .குட்டி பதினாறு அடி பாய்ந்து ஆகணுமே.

Suni said...

ஒன்பதாவது வகுப்புல வெறும் பொட்டு வெடி தானா. Too bad
உங்க கிட்ட இன்னும் எதிர்பார்க்கிறோம்

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

Suni said...

என் classக்கு நல்ல பிள்ளையா வர்ரீங்க. எதாவது பெரிய plan இருக்குதோ. Be careful (நான் என்னைச் சொன்னேன்)

sunitha @ http://tamiltospokenenglish.blogspot.com/

movithan said...

பாரி வள்ளல் ஜோக் அருமை.
வாசிக்கும்போது காட்சிகள் கண்முன்னே படமாக ஓடியது.

எப்பூடி.. said...

பள்ளிகூட அனுபவம் நன்றாக இருக்கிறது.

Alarmel Mangai said...

சிரிக்க வைத்த பதிவு, சித்ரா.
நீங்க வெடி வேடிச்சதை இன்னும் சில, பல ஆசிரியைகள் பீதியுடன் நினைவு கூர்வதாகக் கேள்வி :)))))))

தாராபுரத்தான் said...

சமாளித்திருக்கிறாய்ம்மா...

ஸ்ரீராம். said...

Bird's view... இப்படி ஒரு சமாளிப்பா...! :))

Myooou Cyber Solutions said...

நன்றாக உள்ளது.
படித்த அந்த பசுமையான பள்ளி நாட்களை என்றும் மறக்க முடியாது.

http://mxstar.blogspot.com

Anonymous said...

முடிவுரை:
மக்களே, உங்கள் பிள்ளைகளுக்காவது , அவர்களுக்கு எந்த முறையில் படிப்பது எளிது என்று தெரிந்து கொண்டு, அதன் படி கல்வி கற்று கொள்ள வீட்டிலாவது நீங்கள் கொஞ்சம் உதவி செய்யுங்கள். Visual Thinkers க்கு tuition எல்லாம் வேலைக்கு ஆவுறதில்லை. எல்லோரையும் ஒரே அச்சில் ஊற்றி, ஒரே மாதிரி வடிவங்களாக வார்த்து எடுத்து வைக்க முடியாது.
ஆமோதிக்க வேண்டிய ஒன்று சித்ரா..

ஆமா உங்களை அருவா வெட்டு சித்ரான்னு நினைச்சா வேட்டு வெட்டு சித்ராவுமா? செமபதிவு கலக்கல் சிரிச்சி முடியலை பெண்ணே..

"உழவன்" "Uzhavan" said...

காமெடியோடு கருத்தும்.. குட் :-)

Ramesh said...

//எல்லோரையும் ஒரே அச்சில் ஊற்றி, ஒரே மாதிரி வடிவங்களாக வார்த்து எடுத்து வைக்க முடியாது.

இது சத்தியமான உண்மைங்க சித்ரா..நான் அடிக்கடி இதைத்தான் நினைப்பேன்...ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு விதமாதான் இருப்பாங்க..ஏன் இப்படி அவன மாதிரி ஏன் இல்லை இவன மாதிரி ஏன் இல்லைன்னு கம்பேர் பன்னி கடுப்பேத்துறாங்கன்னு நிறைய தடவை கோபப்பட்டிருக்கேன்..நான்..

Ramesh said...

கடைசி வரி ரொம்ப பிடிச்சதா இருந்துடுவும்...சொல்ல வந்ததை மறந்திட்டேன்..அருமையா எழுதியிருக்கீங்க கட்டுரைய...10 மார்க் கட்டுரைக்கு 100 மார்க்குக்கு எழுதிட்டீங்க..

priyamudanprabu said...

வேலையிடத்தில் கொஞ்சம் டென்சன்
உங்க பதிவு படிச்சதும் ரிலாக்ஸ் ஆகிட்டேன்
நன்றி

priyamudanprabu said...

நல்ல பதிவு சித்ரா

Unknown said...

ஸ்டேஜ் பெர்பாமன்ஸுக்கு எல்லாம் ஒரு தில்லு வேணும்.. ரொம்ப நல்லா நிலைமையை சமாளிச்சிருக்கீங்க..

கலகலப்பான பதிவு..

MANO நாஞ்சில் மனோ said...

யப்பா........................!!!
ரொம்ப நீளமா இருக்கே, இருந்தாலும் பரவாயில்லை, நல்லாத்தான் இருக்கு.
எங்க மேனேஜர் வர்றதுக்குள்ளே படிச்சிட்டேனே......

எம் அப்துல் காதர் said...

//வீட்டில் அமைதி புறாக்களாக இருக்கும் நானும் எனது தோழிகளும், வகுப்பு ஆரம்பிக்கவும், வால் முளைக்காத வானரங்களாக மாறி விடுவோம்.//

பாத்தாவே தெரியுதே!!

//வகுப்பிலோ பள்ளிக்கு வெளியிலோ எந்த வம்பு தும்புக்கும் போனது இல்லை - ரவுடித்தனம் செய்ததும் இல்லை. எல்லார் வீடுகளிலும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு! ஸ்ட்ரிக்ட்! //

நாங்க நம்ம்ம்ம்பிட்டோம். ஹி..ஹி..

Riyas said...

chitra akka superb...

pichaikaaran said...

வார்த்தைக்கு வார்த்தை காமெடி....
குறிப்பா..
”ஆனால், இந்த "புரிதல்"எல்லாருக்கும் இருந்ததில்லை.”

”என்ன இருந்தாலும், என்னோடு சேர்ந்து வகுப்பில் நல்லது (லூட்டி) , கெட்டது (punishment) எல்லாவற்றிலும் பங்கு போட்டவள் ஆயிற்றே ”

போன்ற வரிகள் மிக மிக அருமை....
ஆனால்...
”ஏதோ ரஜினி ஸ்டெப் மாதிரி போடுவாள் ” என நைசாக தலைவரை கிண்டல் செய்து இருந்தாலும், அதற்கு கிடைத்த வரவேற்பையும் எழுதி தலைவர் ஸ்டைலுக்கு நிகர் தரணியில் இல்லை என நிரூபித்து இருக்கிறீர்கள்..

தமிழ்க்காதலன் said...

சித்ராக்கா.. சிரிக்க முடியல..., எவ்வளவு சிரிச்சாலும் அடக்க முடியல. உங்களுக்கு தைரியம் அதிகம்தான். உண்மையை எழுதி இருக்கிறீர்கள். ( என நினைக்கிறேன்) என்னால நினைச்சே பார்க்க முடியலக்கா நீங்க டான்ஸ் ஆடுவதை. விளையாட்டுத் தனம் இருந்தாலும் "விசயமும்" இருக்கு.... ( நம்புங்கப்பா..) நல்ல பகிர்வுக்கு நன்றிக்கா.

DREAMER said...

டேன்ஸ் லூட்டி அருமை

//அப்பொழுதுதான், விஷயங்களை எல்லாம் ஒரு "Bird's view" வில் பார்க்க பழகி கொண்டேனோ?//
செம்ம வரிகள் இது!

நானும் உங்களைப்போல் Bird's Viewல் நின்று பாடம் கற்றுக் கொண்டதுண்டு, அப்போ நானும் Visual Thinker தானே..!

-
DREAMER

Muruganandan M.K. said...

நல்லா அனுபவித்து படித்திருக்கிறீர்கள். எனக்கு எனது மருத்துவ கல்லூரி படிப்புக் காலங்களை நினைக்கச் செய்தது.

Anonymous said...

பள்ளிப்பருவங்களும் கல்லூரிக் காலங்களும் என்று மாறாத பசுமையான நினைவுகள்! நினைவுகளை அசை போட வைத்த உங்கள் பதிவு அருமை!

KParthasarathi said...

pl see my tamil blog
http://vasparth.blogspot.com/

vinu said...

sorry pa conjuuuuuuuuuuuuundu late aayudichu



neenga verbala illai visuallaanu ellam theariyaathu but intha story oru visual treat thanthauennovo konjuuuuuuuuuuuuundu unmaithaan


vartaaaaaaaaaa

dheva said...

ஒரு தீம்....

அந்த தீம் புல்லா.. நகைச்சுவை ஓட்டமாக கருத்துக்களை அள்ளி வீசியிருக்கீங்க...

காட்சிகளும் கோணங்களும் அனுபவங்களும்....எதிர்கொள்ளலும் என்று..

நிஜமாவே ஒரு சூப்பர் ஹிட் மூவி பார்த்த மாதிரி ஒரு பதிவு சித்ரா...!

வாழ்த்துக்கள்...!

Aathira mullai said...

எமக்கும் மலரும் நினைவுகள் மலர்ந்தன..நன்றிங்க சித்ரா..

ஹுஸைனம்மா said...

//வீட்டில் அமைதி புறாக்களாக இருக்கும் நானும் எனது தோழிகளும், வகுப்பு ஆரம்பிக்கவும், வால் முளைக்காத வானரங்களாக மாறி விடுவோம். ... ஆனால், வகுப்பிலோ பள்ளிக்கு வெளியிலோ எந்த வம்பு தும்புக்கும் போனது இல்லை - ரவுடித்தனம் செய்ததும் இல்லை. எல்லார் வீடுகளிலும் ரொம்ப ஸ்ட்ரிக்ட்டு! ஸ்ட்ரிக்ட்டு! ஸ்ட்ரிக்ட்டு! //

அதே, அதே சித்ரா!! நானும் உங்களைப் போல நல்ல புள்ளைதான்!!(வீட்டில மட்டும்) :-))))

குந்தவை said...

:) mudiyala...

Mythili (மைதிலி ) said...

Enakku ithu erkkanave therinja kathai thaan... Addittional informations romba nallaa irukku

culinary tours worldwide said...

fantastic mam \
dear chitra mam i will send some food courier for u '\ thank
u for comments

அரசூரான் said...

ஆத்தா... நான் பீஸாயிட்டேன். நான் காமெடி பீஸ சொன்னேன். கலக்கல்.

Chitra said...

தொடர்ந்து ஆதரவு தரும் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகள். எல்லா புகழும் இறைவனுக்கே!