Tuesday, November 24, 2009

யோசிக்காம சொல்லிட்ட, சரி. இப்பவாவது சொன்னதை யோசி.





சில  சமயம் யாராவது சில கேள்விகள் கேட்கும்போதோ பதில் சொல்லும்போதோ, "எப்படி, இவங்களால மட்டும், எப்படி?" என்று உங்களை யோசிக்க வைத்திருக்கிறதா?  

எனக்கு 9th and 10th classes க்கு science teacher ஆக Mrs.மேரி கமலம் என்பவர் இருந்தார். அடிக்கடி மாணவிகளிடம் கேள்வி கேட்கும் வழக்கம் உள்ளவர். அவர் கேள்வி கேட்கும்போதே நான் நெருப்பு கோழி மாதிரி தலையை எதிலாவது புதைத்து கொள்ள வகை தேடுவேன். அவர்  கண்களை  பாக்க நேர்ந்தால் அந்த கேள்விக்கு பதில் சொல்ல அந்த மாணவி தான் எழும்ப வேண்டும். எழும்பியவள் சரியான பதிலை சொல்ல தவறினால்,  கண்டித்துவிட்டு உட்கார சொல்லும்போது எப்பொழுதும், "sit down, don't show your stupidity in the class" ("உட்கார். உன் முட்டாள்தனத்தை வகுப்பில் காட்டதே") என்பார். அந்த டீச்சரின் punch dialogue ஆக நாங்கள் அதை கருதி நாங்களும் சில சமயம் தோழிகள் நடுவில் விளையாட்டாக சொல்லி சிரிப்போம்.

ஆனால் இன்றும்  நான் சொல்ல வேண்டியது வரும் என்று நினைக்கவில்லை. சிலரின் கேள்விகள் அல்லது பதில்களை கேட்கும்போது என்னை அறியாமல் மனம், Mrs.மேரி கமலம் டீச்சரின் வசனத்தை copyright பற்றி கவலை படாது சொல்லி பார்த்து கொள்கிறது. "Sit down, don't show your stupidity." (உட்கார். உன் முட்டாள்தனத்தை காட்டாதே")

சித்ரா (மதுரையில்):    என்ன ரோடு ரொம்ப மோசமா இருக்கு? ஆட்டோ போகும்போது ரொம்ப குலுங்கி கஷ்டமா இருக்கு.
அறிவு ஜீவி:   என்ன பண்றதுங்க? மூணு மாசம் முந்திதான் ரோடு போட்டான். கவெர்மெண்டு நல்லது செஞ்சாலும் இந்த மழைக்கு பொறுக்கலை. விடாம பெஞ்சு குண்டும் குழியுமா ஆகி விட்டது.
(hello, அறிவு கொழுந்தே, வெயில் மழை எல்லாம் தாங்கிற மாதிரி போடறதுக்கு பேருதான் ரோடு. இவன் போட்ட ரோடு லச்சணத்தை பத்தி பேசாம........ இதுக்குன்னு மழை பெய்யும் போதெல்லாம் ரோடுக்கு  குடையா பிடிக்க முடியும்?)

சாத்தூரில் எங்கள் சொந்தக்கார பெண் ஒருவர் காலில் சூடான எண்ணை கொட்டி விட டாக்டரிடம் போய் treatment எடுத்துகொண்டார். எரிச்சல் வலி போக tablets உம்  காயத்தில் போட ஒரு ointment உம் டாக்டர் கொடுத்து இருந்தார்.  ரெண்டு நாட்கள் கழித்து வீட்டுக்கு அவரை வேறு விஷயமாக பார்க்க வந்த ஒரு பெண், காலில் இவரது காயத்தை பார்த்து விட்டு -
அறிவு ஜீவி:  டாக்டர்ட்ட போனீங்களா?
சொந்தக்கார பெண்: ஆமாம், வலிக்கு மருந்தும் காயத்திற்கு தைலமும் தந்தார்.
அறிவு ஜீவி:  ஊசி ஏதும் போட்டுக்கலையா?
சொந்தக்கார பெண்: வேண்டாம்னுட்டார்.
அறிவு ஜீவி: எங்க டாக்டர் கிட்ட போங்க. ஒரு ஊசி போட சொல்லுங்க. ஒரே ஊசிதான். உடனே சரியா போயிடும்.
(hello, அறிவு கொழுந்தே, MBBS MD எல்லாம் முடிச்சிட்டு ஒருத்தர் பல்லாங்குழி விளையாடவா போர்டு மாட்டிக்கிட்டு உக்கார்ந்திருக்கார். ஒரு மாய ஊசி போடுங்கனு இவரே treatment சொல்லி டாக்டர் செய்றதுக்கு அவர் ஏன் medical college போயிருந்து இருக்கணும்? இந்த பெண்ணிடம் ஒரு tuition class போயிருந்தாலே  போதுமே.)

Texas இல் ஒரு Indian Students' Association orientation meeting போது:     நீங்க உங்க இந்தியன் நண்பர்கள்  மட்டும் இருக்கும் போது உங்க மொழியில பேசிக் கொள்ளலாம். ஆனால் department or class இல் மற்ற மாணவர்கள் மத்தியில் உங்க சொந்த மொழியில் உங்கள் இந்தியன் நண்பர்களுடன் பேசாமல் Englishil பேசுவது நல்ல பண்பு.
அறிவு ஜீவி:  அவங்க மட்டும் அவங்க தாய் மொழியில் பேசும்போது நான் ஏன் என் தாய் மொழியில் பேசக் கூடாது.
(hello, அறிவு கொழுந்தே, பண்புக்கும் வீம்புக்கும் வித்தியாசம் தெரியாதவனே, உனக்கு ஆங்கிலம் தெரியலை என்றால் வேறு விவகாரம். Social ethics தெரியலைனா?)

அறிவு ஜீவி (இந்தியாவில் இருந்து முதல் முறையாக இங்க வந்திருந்த ஒரு நண்பரின் மனைவி):  சித்ரா, நீங்க தயிர் எங்க வாங்கினீங்க?
சித்ரா:  grocery store ல தான்.
அறிவு ஜீவி: இந்தியன் store ஆ அமெரிக்கன் store ஆ?
சித்ரா:  well, American store தான்.  அங்கியே யாரு கிட்டேயாவது கேட்டா எங்கு இருக்குன்னு சொல்லி இருப்பாங்களே.
அறிவு ஜீவி:  கேக்கலாம்னு நினைச்சேன், சித்ரா. கடையில் சுத்தி பாத்தா ஒரே foreigners ஆ இருந்தாங்க. இந்தியன்ஸ்  ஒருத்தரையும் காணோம். அதான் பேசாம வந்திட்டேன்.
(hello, அறிவு கொழுந்தே, அவன் நாட்டில் வந்து உக்காந்துக்கிட்டு அவனையே foreigner ஆக்கிட்டீங்களே? ஒண்ட வந்த பிடாரி ஊரு பிடாரியை விரட்டின கதையா ....)

சென்னையில் ஒரு அறிவு ஜீவி:   சித்ரா, உன் மகன்  என்ன இப்படி இருக்கான்? அமெரிக்காவில் இருந்து வரதுனால நல்ல குண்டா வெள்ளையா கொழு கொழுன்னு வெள்ளைக்காரன் மாதிரி இருப்பான்னு நினைச்சேன்.
(hello, அறிவு கொழுந்தே, நான் அமெரிக்காவில்தான் பிள்ளைய பெத்தேன். ஒரு அமெரிக்கனுக்கா/வெள்ளைக்காரனுக்கா பிள்ளைய பெத்தேன்? அவன், அவனோட  அப்பாவை மாதிரி இல்லாம பக்கத்து வீட்டு வெள்ளைக்காரன் மாதிரி இருந்தா குடும்பத்தில் பிரச்சினை வராதா?  நாங்க நல்லா இருக்கிறது புடிக்கலையா?)

இப்போ எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகணும். இவங்க இப்படி பேசறதுக்கு காரணம்:
Ignorance or Innocence or stupidity?
அறியாமையா? வெகுளித்தனமா? முட்டாள்தனமா? 

Saturday, November 21, 2009

சினிமாவை அல்ல, சினிமா விமர்சனங்களை விமர்சிக்கலாமா?




ஏதாவதொரு சினிமாவை விமர்சிக்கலாமா என்று வெட்டியாக சிந்தித்து கொண்டிருந்த போது, சினிமாவை அல்ல, சினிமா விமர்சனங்களை விமர்சிக்கலாமா என்று தோணுச்சு..........

ஒரு நாள் ஒரு நிமிடம் பிடிக்கும் ரசிக்கும் விஷயங்கள் கூட வேறொரு நாள் வேறொரு நேரம் பிடிக்காமல் போய்விடுகிறது. இல்லையா?  நான் Texas இல் இருந்த போது,  ராதாகிருஷ்ணன், கார்த்திக், ராஜேஷ், ராமலிங்கம், ராஜ் மோகன் என்று நண்பர்கள் பட்டாளத்துடன் கேலியும் கிண்டலுமாய் ரசித்து பார்த்த படம்: விஜயகாந்தின் "நரசிம்மா". அதே படத்தை சமீபத்தில் K TV யில் போட்ட போது பத்து நிமிடத்துக்கு மேல பாக்க முடியலை. அப்போ படத்தை பற்றி என்ன சொல்வது? சரியான வாண்டு பட்டாள நண்பர்கள் இருந்தால் கண்டிப்பாக பாக்க வேண்டிய படம். Award rangekku அலசி ஆராயும் நண்பர்கள் இருந்தால் கண்டிப்பாக தவிர்க்க வேண்டிய படம்.

பலருக்கு, சினிமா ஒரு பொழுதுபோக்கு அம்சம் - ஒரு mass entertainment.
சிலருக்கு, அது ஒரு educational சாதனம் - documentary.
சிலருக்கு, அது ஒரு கலை அம்சம் - award தரம்.
சிலருக்கு, அது ஒரு மொக்கை - ஜாலிக்கு மட்டும்.
சிலருக்கு, அது கனவுலகின் திறவுகோல் - fantasy.

எதிர்பார்ப்புகள் மாறுபடுகின்றன.  மொக்கை படம் என்று தெரிந்தாலும், படம் பாக்க போகிறவர்களும் இருக்கிறார்கள். They will have fun somehow. சூப்பர் படம் மட்டும்தான் பாப்பேன் என்று சொல்லி, ரொம்ப எதிர்பாத்து, படம் பாத்து நொந்து போகிறவர்களும் இருக்கிறார்கள்.



சிலர் விமர்சனம் என்ற பெயரில் மொத்த கதையும் சொல்லிடுறாங்க. படத்தில் யார் யார் செத்து போறா - யார் கொலை பண்ணா...... இது எப்படி இருக்கு? ஒரு வேளை, படத்தில் சொல்லிக்குற மாதிரி வேற எதுவும் இல்லையோ? படிக்கும் நமக்கு, இப்ப சினிமா கதை கேக்க வந்தேனா, சினிமா எப்படி இருக்குனு கேக்க வந்தேனா என்று குழம்பி விடும்.

ஒரு award பட  நடிகையிடம்  குலுக்கல் ஆட்டத்தையும், குலுக்கல் ஆட்ட நடிகையிடம்  award range நடிப்பையும் எதிர் பார்த்து விமர்சிக்க மாட்டார்கள்தானே? நமீதாவை ஆட்டத்துக்காக  ரசிப்பவர்களால்,  அவர் serious ஆ நடிக்க (???) ஆரம்பித்து விட்டால் எப்படி ரசிக்க முடியும்?

ஒரு நாள் எங்கள் வீட்டில் வைத்து ஹோம் தியேட்டரில் "முத்து" படம் பாத்து கொண்டு இருந்தோம்.
ரஜினிக்கு  வயது என்னவா இருந்தா என்ன? ரஜினி ரஜினிதான்.  மீனா மட்டும் இல்லை, மீனா பேத்திக்கு கூட,  அவர் ஜோடியா நடிப்பார்.  ரஜினி, ஒரு hospital இல் ICU  or life supportil இருப்பார். அப்போ, மீனாவோட பேத்தி, டீனா ஒரு நர்சா வந்து, ரஜினி மேல லவ் ஆகி, "தில்   தானா, தில்   தானா.  இன்னும் உங்களுக்கு தில் தானே..." என்று பாடுவாங்க. அதையும் அப்போ என்னை மாதிரி ரசிகர்கள் ரசிப்பார்கள், ஹி,ஹி,ஹி,........... 

மீண்டும், முத்து படத்துக்கே வருவோம்:
"தில்லானா தில்லானா" பாடல் ஆரம்பிக்கவும், நான் ரஜினி மேல் வைத்த கண்ணை எடுக்கவில்லை.  மீனா,  ஏன் குறுக்கே குறுக்கே வாராங்க என்று இருந்தது எனக்கு.
என் கூட படம் பாத்து கொண்டிருந்த ஒரு ஜொள்ளு பார்ட்டி, "மீனா, இந்த பாட்டில் சூப்பர் அப்பு!" என்றார்.
வேறு இரண்டு லொள்ளு பார்ட்டிகள், "13 தான். " "இல்ல இல்ல, 16 தான்" என்று argue பண்ணி கொண்டு இருந்தார்கள். சத்தம் பெரிதாகவே, என்ன என்று கேட்டேன்.
"சித்ரா, திரும்ப அந்த பாட்டை முதல இருந்து போடுங்க" என்றார்கள்.
"எதுக்கு"
"நான் மீனா தொப்புளுக்கு 13 தடவைதான் close-up என்கிறேன். இவன் 16 தடவை என்கிறான். யார் correctunu சரி பாக்கணும்."

ஒரே மீனாதான். ஒருவர் மீனா முகத்தை பாத்து ஜொள்ளு வடிக்கிறார். மற்ற இரண்டு பேர் மீனாவின் belly button tunnel இல் train விட்டு கொண்டு இருந்தார்கள். அதே சமயம் யாரோ ஒருவர் நிச்சயமாக மீனா ஏன் இப்படி ஒரு ஆட்டம் போடணும்னு முகம் சுளித்து இருந்திருக்கலாம். படம் எடுப்பவர்கள் தங்களால் முடிந்த மட்டும் எல்லார் ரசனையும் cover பண்ண முயற்சிதான் பண்ண முடியும். வேறு என்ன? (இன்னும் போன paragraphil மீனாவோட மிடில் dentukku எத்தனை முறை close-up என்று அங்கேயே stuck-up ஆனவர்கள், மீண்டும் அந்த பாட்டை பார்த்து விடை தெரிந்து கொள்ளவும்.)

தன் சொந்த எதிர்பார்ப்பை வைத்து விமர்சிப்பவர்கள், "இது என் சொந்த கருத்து. இது என் சொந்த விருப்பு வெறுப்பு. என் எதிர்பார்ப்புக்கு இவ்வளுவுக்குதான் வந்திருக்கு." என்று சொல்லிட்டா நல்லா இருக்கும்.

Detroit இல் உள்ள என் தோழி ஒருத்தி, எந்த தமிழ் படம் என்றாலும் DVD யோ VCD யோ, உடனே இந்தியன் stores இல் இருந்து rent பண்ணிட்டு வந்து பார்ப்பாள். பாக்கும்போதெல்லாம், "சே, இந்த படத்தை போய் ஏன்தான் எடுத்துட்டு வந்தேனோ? தாங்க முடியவில்லை. இப்படியா படம் எடுக்கிறது?" என்று புலம்பிக்கொண்டே, remote control உதவியுடன், 1/2 மணி நேரம், 3/4 மணி நேரத்தில் மொத்த படத்தையும்  பாத்து விடுவாள். இதை கவனித்து வந்த அவள்  கணவர், ஒரு முறை அவளிடம் இருந்து remote control ஐ எடுத்து மறைத்து விட்டு, "முழு படத்தையும் ஒரு சீன் விடாம பாரு. அப்போதான், இந்த தமிழ் பட addiction போகும்" என்று shock treatment கொடுத்தார். இப்போ அவள் வருடத்திற்கு 3 தமிழ் படங்கள் பார்த்தாலே அதிகம் என்று நினைக்கிறேன். அந்த 3 படங்களும் மற்றவர்களின் விமர்சனத்தையோ ரசனையை பொறுத்தோ தான் முடிவு செய்ய்படுகிறதோ?



opinion வேறு; விமர்சனம் வேறு.  opinion comes from one's ரசனை.  ரசனை  என்பது ஒருவருக்கொருவர் மாறுபடுவது. ஒருவரின் விருப்பு, வெறுப்பு, interest, புலமை, mood, நட்பு வட்டம் போன்று பல அம்சங்கள் ஒருவரின் ரசனைக்கு ஆணி வேர்களாகின்றன. விமர்சனம் - சுய விருப்பு வெறுப்பு இல்லாமல் நடு நிலைமையுடன் சொல்வது.
 

ஒரு படத்தை விமர்சிப்பதற்கு நிறைய சினிமா அம்சங்களை பற்றி ஆராய்ச்சி செய்திருக்க வேண்டும். குறைந்த பட்சம், காசு கொடுத்து டிக்கெட் வாங்கி தியேட்டரில் போய் படம் பாத்து அவஸ்தை பட்டிருக்க வேண்டும். "பார்த்ததும் படித்ததும், ஜெட்லி சார்" மாதிரி. அவரோட ஒரு கட்டுரையில் : அங்கே பார்த்த படம் சக்கரக்கட்டி என்று நினைக்கிறேன், நிறைய பேர் அதை மொக்கை படம் என்று சொன்னார்கள் இருந்தும் நான் போய் படம் பார்த்தேன் அது ஏன் என்றால் எப்படி அவளோ கேவலமா படம் எடுத்துங்கானு தெரிஞ்சிக்கதான்."  இதை படிச்சிட்டு இன்னும் சிரித்து கொண்டு இருக்கிறேன். 


அப்படி இல்லாமல், என்னை  மாதிரி ஆட்கள் comment அடிப்பதற்கு பேரு விமர்சனம் இல்லை - படத்தை கலாய்க்கிறது. right?

Tuesday, November 17, 2009

ஆசை தோசை அப்பள வடை: bloggaa எழுதுற blog!

நான் பாட்டுக்கு "வரட் வரட்" னு காலை சொரிஞ்சோமா நாலு friends ஒட அரட்டை அடிச்சோமானு இருந்தேன்.

என் கண்ணாவும், என் ஆருயிர் தோழி, அம்முவும், இவ கடியை மொக்கையை நாம மட்டுமே கேட்டு அவஸ்தை படறோமே, மற்ற நண்பர்கள் மட்டும் தனியா என்ன புண்ணியம் பண்ணாங்க, இவாட்ட இருந்து escape ஆகுறதுக்கு என்று பேசி, முடிவு பண்ணி, "சித்ரா, நீ blog எழுது; நீ blog எழுது....." என்று உற்சாகபடுத்தினார்கள். என்ன ஏது என்று யோசிக்காமல், நாளைக்கு கோதாவில் இறங்கினால் நம்ம தலைதான் உருளப் போகுது என்ற நினைப்பும் இல்லாமல் Oct. 22, 2009 அன்று சுப தினத்தில், ஒரு பொன்னான நேரம் கூடி வர, ஆரம்பித்து விட்டேன். முழுதா ஒரு மாதம் கூட ஆகாத நிலையில், நான் காலை விட்டது எழுத்து உலகில் மட்டும் அல்ல என்று இந்த மர மண்டைக்கு தெரிந்து விட்டது.

Create a blog - கொஞ்சம் வெட்டி பேச்சு - create பண்ணியாச்சு.
bloggunga - bloggitten.
நண்பர்களுக்கு link ஐ அனுப்புங்க - அனுப்பிட்டேன்.
மென் மேலும் எழுதுவதற்கு, அந்த நண்பர்களின் motivation, ரொம்ப முக்கியம். - motivate ஆயிட்டேன்.
ஆச்சா? முடிஞ்சுதா? இல்ல, இனிமேதான் சங்கதியே இருக்கு, மக்களே.


அமுதா: இப்ப successful blog உன்னு காட்டணும்.
சித்ரா: எப்படி? ஓசியில் ஓடற படத்துக்கு , வசூல் கணக்கா? என்ன சொல்றீங்க?
அமுதா: ஆமா, சித்ரா. ஆள் (followers) புடிக்கணும். நிறைய பேர் படிக்கணும். கமெண்ட் எழுதனும். award வாங்கணும்..... இப்படி நிறைய matter இருக்கு, அப்பு.
அமுதா, நான் கட்சி ஆரம்பிக்கலை. நான் புதுசா சினிமா படம் எடுக்கிறேன்னு நினைச்சிட்டீயா? நான் blog எழுதுறேன்.  blogumaa.....
அமுதா: நான் சொல்றத சொல்லிட்டேன். இனிமே உன் பாடு. blog ஆரம்பிச்ச ஆதி காலத்தில் (கி.பி. 2007) இருந்து இருக்கிருவங்களோட ஆசீர்வாதம், கூட்டணி எல்லாம் வேணும்.


நமக்கு எழுததான் தெரியும். இந்த Amway மாதிரி ஆள் புடிக்கிற வேலையை, என் திட்ட (?!) குழுவினர்களிடம் (Planning (?!) committee) விடுகிறேன்.

கட்சியின் தலைமை செயலாளர், சாலமன்,  குழுவை அழைத்து கட்சியில் எப்படி ஆள் சேர்ப்பது என்று, பொது குழு meeting நடத்துகிறார்:

சாலமன்:   எப்படி கட்சிக்கு - bloggukku - ஆள் புடிக்கிறதுன்னு நாம இப்ப முடிவெடுக்கணும். Microsoft, முதலில் இப்படித்தான் computer main-stream உக்கு வந்த நேரம், Solitaire Game மூலமா மக்களை, right click, left click, drag.....போன்ற விஷயங்களுக்கு பழக்கியது. அது போல, நாமும் ஒரு game "கொஞ்சம் வெட்டி பேச்சு" blog இல் introduce செய்வோம். விளையாட்டு போக்கில், மக்கள் தன்னையும் அறியாமல் "follow" ல click ஆகும்படி வைத்து விடுவோம்.

Michigan Ammu:    followers - தொண்டர் படை. சாலமன், குண்டர் படையும் வேணுமா? "follow" பண்ணலைனா இந்த குண்டர் படைக்கு பதில் சொல்லணும் என்று சொல்வோம்.
சித்ரா: சொறி, சிரங்கு படைனு கேட்காம போனீங்களே. நன்றி.

அனுஜா:   நான் நல்லா வடை பண்ணுவேன். என் ஆருயிர் தோழி, நெல்லை தமிழச்சி கட்சியில் இன்னைக்கு சேருகிரவர்கள், ஒரு வடை பெறும் வாய்ப்பை பெறுவார்கள்.
சாலமன்:    அப்படியே ஒரு வடை தட்ட போகும் முன், follow இல் click பண்ணி, கட்சியில் சேர்ந்துட்டு போங்க.

விஷி :    நான் வேணா, Houston Meenakshi Temple உண்டியல் பக்கம் ஒரு boardu வைக்கிறேன்.
சித்ரா:    இன்றைய special: உண்டியல காசு போட்டுட்டு, அப்புறம் சித்ரா blog இல் போய் "follower" ஆனா, செய்த பூஜைக்கு ரெண்டு மடங்கு பலன்.  அப்படின்னா?

கோமி:    உன் friend, சந்திரா ராஜாவை Miami இலிருந்து chappals வாங்கி அனுப்ப சொல்லு. இந்த வாரத்தில் சேர ஒவ்வொரு follower க்கும் ஒரு ஜோடி Miami chappal இலவசம்.
சாலமன்:    கோமி, ஐடியா நல்லாத்தான் இருக்கு. அங்க, சந்திராவே இன்னும் தான் கட்சியில சேரதுக்கு, follow பண்ணறதுக்கு தனக்கு பேரம் பேசிக்கிட்டு இருக்காரு. அவர் கிட்ட போய்...... ஆமா, நீங்க சேர்ந்துட்டீங்களா?
கோமி: அடுப்பில் வைத்த வத்தல் குழம்பு அடி புடிக்குதுன்னு நினைக்கிறேன். ஒரு நிமிஷம், இந்தா வரேன்.

லலிதம்:    நாலு வருஷம் முன்னால வர, என் "கனவு கன்னி"யாய் இருந்த தானை தலைவி, சித்ராவுக்கு நான் ஏதாவது செஞ்சே ஆகணும்.
சாலமன்:   முதல, நீங்க கட்சியில சேரலாம்...... follow பண்ணலாம்........

தினேஷ்:     US market தொகுதி பத்தியே பேசிக்கிட்டு இருக்கீங்களே. இந்தியாவிலும் branch ஆபீஸ், தொகுதி எல்லாம் கவனிக்க வேண்டாமா?
சாலமன்:    சித்ராவோட தம்பிக்கிட்ட அந்த பொறுப்ப விட்டுரலாம்.
தம்பி (psychiatrist):    Actually, இவ blog ல, follower ஆனப்புறம், மண்டை damage ஆகி, என் உதவி எல்லோருக்கும் தேவைப்படலாம். இப்ப ஆள விடுங்க.

தினேஷ்:    atleast, திட்ட குழுவில் கட்சிக்காரங்க, "followers" மட்டும் தான் இருக்கலாம் என்று செயக் குழு meeting ல முடிவு எடுக்க சொல்லணும்.

சித்ரா:   இந்த  பிரச்சினையே வேண்டாம். பேசாம, blog படிச்சப்புறம் follow ல click பண்ணி follower ஆகலைனா, இன்னைக்கு ராத்திரியே ரத்த வாந்தி எடுத்துருவீங்கன்னு ஒரு எச்சரிக்கை எழுதி வச்சிட்டா?

ஆமாம், நான் ஜாலிக்கு blog எழுத வந்தேனா, அரசியல் பண்ண வந்தேனா? இப்படி "முதல்வன் அர்ஜுன்" மாதிரி புலம்புறேனே..................

அமுதா: "அடுத்து Tamilish, தமிழ் மணம் மாதிரியான blog கடலில் நீ சங்கமம் ஆக வேண்டும்."
சித்ரா: "எதுக்கு? "
அமுதா: "அப்பதான் எல்லோரும் vote பண்ண முடியும்."
சித்ரா: "blog கட்சி பத்திதான் பேசிக்கிட்டு இருந்தோம். இப்ப தேர்தல் பத்தி பேசுற, அமுதா?"
அமுதா: "அஞ்சு வருஷத்துக்கு ஒரு முறை வரும் தேர்தல் பத்தி யார் சொன்னா? இது அதை விட முக்கியம். ஒவ்வொரு blog article வாசிக்கும் போதும் ஓட்டு போடுவாங்க."
சித்ரா: "அம்மா, தாயே, ஐயா, தர்மதுரை, அண்ணாச்சி, ஓட்டு போடுங்க."
அமுதா: "உன்னை பிச்சை எடுக்க சொல்லலை."
சித்ரா: "சரிதான். ஒன்றில், ஓட்டில் பிச்சை வாங்க வேண்டும். ஒன்றில், ஓட்டுக்காக பிச்சை போட வேண்டும்."
அமுதா: "இப்படியெல்லாம் பேசுனா உனக்கு யாரும் ஓட்டு போட மாட்டாங்க. இந்த தெனாவெட்டு பதிலுக்கு எல்லாம் யாரும் award கொடுக்க மாட்டாங்க."
சித்ரா: "award வாங்குன படம்னாலே யாரும் போக மாட்டாங்களே. award வாங்குன blog என்று யாரும் படிக்காம விட்டுட்டா?"
அமுதா: "இது Blog World. award வாங்கினாதான் மதிப்பு. popular blog என்று select ஆகணும். publicity வேணும். ஆயிரம் பேர் blog எழுதுற நேரத்தில் ஜெயிச்சு காட்டணும்."

சரி, TAMILISH.COM இல் link கொடுத்தாச்சு. facebook ல இருக்கு. வேற என்ன?

எனக்கு, சரத்குமார் மாதிரி முன்ன பின்ன யோசிக்காம கட்சி (blog) ஆரம்பிச்சிட்டோமோ என்று இருந்தது.

என் blog வெற்றிக்கு சினிமா strategy ஒத்து வருமா? ரூம் போட்டு யோசிக்கிறேன்:
நோட்டீஸ் ஒட்டலாம். சன் pictures அ sponsor பண்ண சொல்லிட்டு, சன் டிவியில், "ரிவால்வர் ரீட்டா, என் சகோதரியா?" கேட்கிறார், நெல்லை கண்ணு, சித்ரா. படிச்சிட்டீங்களாஆஆஆஆ? அப்படினா, Blog Top 10 ல easy ஆ வந்துரலாம்.

அரசியல் strategy: ஆள் புடிச்சி, வோட்டு போட வச்சி ................... ஆஆஆஆஆஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்!!!!!!

ித்ரா: "நான் என் ஆத்மா திருப்திக்காக எழுதுறேன். ஜாலிக்காக எழுதுறேன்."
அமுதா: "அது blog உலகில் survive பண்ண தெரியாதவன் பேச்சு. இவ்வளவு யோசிக்கிறவா, வீட்டில் diary இல் எழுதி நீ மட்டும் படிச்சிக்கணும். இது public matter மா. மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு."
சித்ரா: "ஹான்..................ஆஹ்ஹ்ஹ்ஹ்ஹ்ஹ்......"
அமுதா: "நாயீ, நாயீ, உன் நல்லதுக்குத்தான் சொல்றேன் புள்ள. என் friend உக்கு ஒண்ணு நல்லது நடக்கட்டுமேன்னு பாத்தா.........."
சித்ரா: "நாளைக்கு blog எழுதுறதுக்கே material கிடைக்குமானு யோசிக்கிறேன். இதுல, இந்த லொள்ளு வேறயா?"


நல்லா கிளப்புறாங்கையா பீதியை...............
சும்மா  காலை சொறிஞ்சுக்கிட்டு இருந்தவளை, சாலமநும் அம்முவும் தலைய சொரிய .... sorry ......பிச்சுக்க வச்சுட்டாங்களே! இது வேலைக்கு  ஆவுறது இல்லை..... நான் பாட்டுக்கு எழுத போறேன்.

Saturday, November 14, 2009

revolver rita தான் என் சகோதரியா?



துணிவு, தைரியம், மன பலம் என்கிறோமே அந்த ஆயுதங்கள்,  சிலரிடம் இருக்கும்வரை அவர்களை பொல்லாதவர்கள் ஆக்குகின்றன.  அவர்களை  எதிர்ப்பவனி (ளி) டம் இருந்தால், எதிர்ப்பவனை (ளை)  வல்லவன் (ள்) ஆக்குகின்றன.  இந்த வாழ்க்கை தத்துவம் 10876 ஐ என் சகோதரி, மூலமாக அறிந்து கொண்டேன். 

அவளுடன் சென்ற பஸ் பயணங்களை மறக்க முடியாது. ஒரு முறை,  மிகவும் நெரிசலான கூட்டமுள்ள பஸ் ஒன்றில் போக நேர்ந்தது. இடி மன்னர்களின் சொர்க்க பூமியாக பஸ் மாறியிருந்தது. என்னை மாதிரி சில  பெண்கள் என்ன செய்வது என்று தெரியாமல் நெளிந்து கொண்டு, எப்பொழுதடா நாம் இறங்க வேண்டிய நிறுத்தம் வரும் என்று காத்திருப்பதை தவிர வேறு வழி தெரியாது நின்று கொண்டு பயணித்தோம். ரொம்பவும் அநியாயத்திற்கு ஒருவன், எங்களிடமும் எங்கள் அருகில் இருந்த மற்ற பெண்களிடமும் தன் லீலைகளை தொடர்ந்து கொண்டிருந்தான். 
ரிவால்வர் ரீட்டா, சத்தமாக: "ஏன் இவ்வளவு கஷ்டப் படுறீங்க? நாங்க அந்த டிரைவர் அண்ணாச்சி பக்கம் உள்ள இடத்தில் வரிசையாக நின்று கொள்கிறோம். நீங்க ஆசை தீர, மொத்தமாக  இடிச்சுட்டு  போய்டீங்கன்னா, மீதி தூரமாவது  நாங்க நிம்மதியாய் இருப்போம்" என்று சொல்ல அனைவரும் சிரித்து விட்டார்கள். டிரைவர் அண்ணாச்சியும் தனக்கு கொடுக்கப்பட்ட புது பொறுப்பில் உச்சி குளிர்ந்து, பெண்களை காப்பற்ற வந்த ஹீரோவாய்,  அந்த இடிராசாவை திட்ட,  அவமானத்தில் தலை குனிந்தவன் அடுத்த நிறுத்தத்தில் முதல் ஆளாய் இறங்கி காணாமல் போனான்.

மற்றொரு முறை, இரவு பயணத்தில், பின் சீட்டுக்காரன்,  அந்த  பஸ்ஸில் போடப்பட்ட குப்பை படத்தின் கனவு கன்னியை நினைத்து கொண்டோ என்னவோ,   எங்கள் இடுப்புகளில் கிடார் வாசித்துக்  கொண்டு இருந்தான். ரிவால்வர் ரீட்டா, தன்  கையில் இருந்த safety pinனை நேராக வளைத்து அவன் கையில் ஆழமாக குத்தி அழுத்தமாக கோடு கிழித்தாள். தூண்டிலில் மாட்டி கொண்ட மீனை போல், இவன் கை, இவள் pin தூண்டிலில் மாட்டி கொண்டது. கையை சட்டென்று எடுக்கவும் முடியவில்லை. ரத்தமும் கொட்ட ஆரம்பித்தாலும், படு பாவிக்கு கத்த முடியாத சூழ்நிலை. இவள் பின்னை எடுத்த பிறகு, கையை தன் அருகில் இழுத்து கொண்டவன், தேள் கொட்டிய திருடனாக இருக்க, நாங்கள் நிம்மதியாக பயணித்தோம். காலையில் அவள் காட்டிய பின்னை வெளிச்சத்தில் பார்த்தோம், அப்படி ஒரு துரு பிடித்த பழைய  பின். ரொம்ப கூலாக, "பின்ன இவனுக்காக நான் கடையில் இருந்து புது பின்னா வாங்கி வர முடியும்?" என்றாள். அதில் இருந்த துருவுக்கு, அவன் tetanus injection, உடனே எடுக்காமல் இருந்திருந்தால், இன்று இதை படிக்க நிச்சயம் உயிரோடு இருக்க மாட்டான். 

இரண்டு வருடங்களுக்கு முன் கூட இவள் என்னை ஆச்சரியப் படுத்துவதை நிறுத்தவில்லை.  இன்சூரன்ஸ் agent ஆகவும் இருந்த ஸ்கூல் ஆட்டோ டிரைவர், இவள் கொடுத்த இரண்டு மாத premium amount ஐ ஒழுங்காக கட்டாமல் தானே வைத்து கொண்டு, இவள் receipt கேட்கும் போதெல்லாம் வெவ்வேறு காரணங்கள் சொல்லி இழுத்து அடித்தான்.  இவள் கணவரும் திடீரென வேறு ஊருக்கு மாற்றலாகி  போய்விட,  அவன் கேட்க ஆளில்லை என்று தெனாவெட்டாக பதில் சொல்ல ஆரம்பித்தான். இவள் வேறு ஆட்டோவில் ஏறி இன்சூரன்ஸ் ஆபீஸ் போய் விவரம் அறிந்தாள். வந்த ஆட்டோக்காரனிடம் அவன் ஏற்றுக் கொள்ளும் விதமாக ஏதோ காரணம் சொல்லி, பணத்தை ஏமாற்றிய அட்டோக்காரனின் வீட்டுக்கு தனியாக சென்று விட்டாள். இவள் போன நேரம், அவனின் மனைவி மட்டும் இருக்க, அவளிடம்: " போலீஸ் ஸ்டேஷனில் கம்ப்ளைன் பண்ணிட்டு தான் வரேன். அவங்க உடனே arrest பண்ண வறேன்னாங்க. நாந்தான் ஒரு முறை நேரில் கேட்டு பாத்துட்டு சொல்றேன்னு வந்திருக்கேன். அவன் வீட்டில் இல்லையா? நாளை மாலைக்குள் அவன் பணத்தை என்னிடம் கொடுத்து விட்டால், நான் போலீசில் கொடுத்த complain ஐ வாபஸ் வாங்கிக்கறேன்" என்று பீலா விட்டு இருக்கிறாள். பயந்து போன மனைவி, கணவன் வந்ததும் அனுப்பி வைப்பதாக சொல்லிய பின்தான் ரிவால்வர் ரீட்டா வந்திருக்கிறாள். 

மறு நாள் மாலை, வந்த ஆட்டோ டிரைவர், இவளிடம் பணத்தை இன்னும் ரெண்டு வாரத்தில் திருப்பி தந்து விடுவதாகவும் போலீஸ் complain அவள் உடனடியாக வாபஸ் வாங்க வேண்டும் என்றும் சொன்னான். இவள் அவனிடம், " உன் பேச்சை நான் எப்படி நம்பறது? ரெண்டு வாரத்தில் அந்த அமௌன்டை எழுதி திருப்பி தரேன்னு நான் சொல்ற மாதிரி எழுதி கொடு. நாளைக்கே போய் வாபஸ் வாங்குறேன்" என்றாள். அப்போது தப்பிக்கும் விதமாக அவனும் இவள் சொல்லியபடி எழுதி கொடுத்து விட்டான். இரண்டு வாரமாக இவள் காத்திருக்க, அவன் ஆள் எஸ்கேப். இவள் இன்னொரு ஆட்டோ டிரைவர் மூலமாக, தான் மீண்டும் போலீஸ் போக போவதாக சொல்லி தகவல் அனுப்பி இருக்கிறாள். கடுப்பாகி போன டிரைவர் cum agent, மறு நாளே அவள் வீட்டுக்கு வந்து உதார் விட்டு இருக்கிறான். 

 ஆனாலும், கலவரப் படாமல், ரிவால்வர் ரீட்டா அமைதியாக, "அட முட்டாள் அண்ணே, முதலில் நான் சொன்னப்போ நீ யோசிக்கவில்லை. நான் உன்னிடம் கொடுத்த premium பணத்திற்கு என்னிடம் எந்த ஆதாரமும் இல்லாமல் இருந்தது. இப்போ நீ எழுதி கொடுத்த பேப்பர் இருக்கிறது. அதை ஏற்கனவே ஒரு வக்கீல் கிட்ட பத்திரமாக கொடுத்து வச்சிருக்கேன். நீ ஏமாற்றினாலோ என்னை காயப் படுத்தினாலோ போலீசுக்கு evidence இருக்கும்" என்று அவுத்து விட்டு இருக்கிறாள். வாயடைத்து போனவன், மறு நாளே பணத்தை திருப்பி கொடுத்து விட்டான். செல்லும் முன், "சின்ன பொண்ணு, ஒண்ணும் தெரியாத பொண்ணுன்னு நினைச்சி ஏமாத்த பாத்தேன். நீ விவரமா என்னை மடக்கிட்டீயே!" என்றான். 

அத்தோட விட்டாளா? இல்லாத பானையில் மோரு என்ன வெண்ணையே எடுத்து காட்டுறேன் என்ற மாதிரி, அவன் எழுதி கொடுத்த தாளை வைத்து, அந்த இன்சூரன்ஸ் company இல் முறை படி action எடுக்க வைத்து அந்த ஆட்டோ டிரைவர் இன் agent அந்தஸ்த்தை cancel பண்ண வைத்து விட்டாள். 
சொல்லுங்க, இவளுக்கு நான் ரிவால்வர் ரீட்டா என்று பட்ட பெயர் வைத்தது சரிதானே?
பயந்து ஒடுங்கும் போது, வாழ்க்கை நம்மை அழ வைக்கிறது. துணிந்து எதிர்த்து நின்றாலோ, வாழ்க்கை நம்மை சிரிக்க வைக்கிறது.  (தத்துவம் # 10877)


Friday, November 13, 2009

இவக பக்கத்து வீட்டில் இல்லையேனு சந்தோஷப்படுங்க..

 
பக்கத்து வீட்டு அக்கா:  friendly nature; ஓடி வந்து உதவுபவர்; நம் வீட்டில் ஒருத்தி போல் இருப்பவர்.
Don't take her for granted. You don't know who, few people are put up with...... keep reading......

பக்கத்து வீட்டு  நொக்கா:    அக்காவுக்கு நேர் எதிர்.

என் நண்பர்களுக்கு ஏற்பட்ட சில  அனுபவங்களை என்னிடம் புலம்பியதிலிருந்து  தொகுத்து இங்கே தந்துள்ளேன். இப்படியும் நிஜத்தில்  இருக்காங்க......

என் நண்பர்:  "நான் ஊருக்கு போயிட்டு ஒரு வாரம் கழித்து பத்தாம் தேதி மதியம்  வரேன். அன்னைக்கு காலையில்  மெட்ரோ வாட்டர் ஒரு குடம் எனக்கும் சேர்த்து பிடித்து வைத்து விடுகிறீர்களா?"
பக்கத்து வீட்டு  நொக்கா :  சரியா போச்சு. நீயே phone செய்து ஏற்பாடு பண்ணிட்டா, பத்தாம் தேதி மதியமே ஒருத்தன் வந்து தண்ணி கேன் வீட்டில் வந்து டெலிவரி பண்ண போறான். இதுக்கு நான் எதுக்கு? நீ நிம்மதியா ஊருக்கு போயிட்டு வாப்பா.
(தவிச்ச வாய்க்கு தண்ணி கொடுக்காம வேதாந்தம் பேசிக்கிட்டு.....)

பக்கத்து வீட்டு  நொக்கா:   எதிர்த்த வீட்டு வேலைக்காரி என் வீட்டிலும் கொஞ்சம் உதவிக்கு வராளானு கேக்கணும்.
எதிர்த்த வீட்டில் நிறைய சங்கதி நடக்குறது. எதுவும் நமக்கு முழுதா தெரிய மாட்டேங்குது.
(புரணி  பேச வேலைக்கு ஆள் வைத்து - அவளுக்கு சம்பளம் கொடுத்து.......)

பக்கத்து வீட்டு நொக்கா:   நேற்று ராத்திரி, உங்க சின்ன பொண்ணு அலற சத்தம் கேட்டதே. என்ன ஆச்சு?
(அலறல் கேட்டதும் உதவிக்கு உடனே வராமல் - மறு நாள் கதை கேட்கும் அழகு சுந்தரி.......)

பக்கத்து வீட்டு நொக்கா: என்ன இவ்வளுவு late ஆ தினமும் வேலையில் இருந்து வரே? அக்கம் பக்கத்தில் என்ன என்னவோ பேச போறாங்க......
(என்னே உந்தன் கரிசனம்.... அந்த அக்கம் பக்கம் என்பது நீதானே? இல்லைனா, அப்படி பேசுறவங்க கிட்டதான அறிவுரை சொல்லணும்.)

பக்கத்து வீட்டு நொக்கா: potluck dinnerkku  நீங்க rice pulao (புலாவ்) கொண்டாங்க;  நீங்க chicken curry கொண்டாங்க; நீங்க சாம்பார் கொண்டாங்க; நீங்க ரெண்டு பேரும் ஆளுக்கொரு veg. டிஷ் - கூட்டு அல்லது பொரியல் அல்லது குருமா - கொண்டாங்க; நீங்க இனிப்புக்கு ஏதாவது கொண்டாங்க; நான் வெள்ளை சாதம் வச்சு வெங்காய பச்சடி (raita) பண்ணிடறேன்.
(நல்ல மனசுக்காரி - வெள்ளை சாதம் வைக்கிற கஷ்டமான வேலைய தோழிகளுக்கு கொடுக்காமல் தானே கஷ்டப்பட்டு செய்யப்  போறா....)

என்  தோழி: உங்க வீட்டு இட்லி பொடி நல்லா இருக்கு. எனக்கு  கொஞ்சம் தாரீங்களா?
பக்கத்து வீட்டு நொக்கா: கொஞ்சம் தாரேன். ஆனால் எங்க ஊரில் இட்லி பொடி கொடுத்தா ஒரு ரூபாவது கையில வாங்கிக்கணும். சும்மா கொடுத்தா சண்டை வந்திடும்னு ஒரு நம்பிக்கை. அதனால், நீங்களும் காசு கொடுத்திடுங்க.
(எந்த ஊரு நம்பிக்கையோ? இட்லி பொடிக்காக ஊரையே விலை பேசுறா.....)

பக்கத்து வீட்டு நொக்கா:  உங்களுக்கும் கொடுக்க சொல்லித்தான் அவங்க கேக் கொடுத்தாங்க. உங்களுக்கு பிடிக்குமோ என்னவோனு வேண்டாம்னு சொல்லிட்டோம்.
(காசா? பணமா?  ஓசியில் ஒரு ஆள் கொடுக்கிறதில் கூட ஆப்பு வச்சிட்டாளே ......)

என் தோழி : ஒரே கவலையா இருக்கு. ஒரு வயசு ஆகியும் என் மகன் இன்னும் சரியா நடக்க மாட்டேங்கிறானே.
doctor இன்னும் ரெண்டு மாதம் wait பண்ணலாம் என்கிறார்.
பக்கத்து வீட்டு நொக்கா: எனக்கு அந்த கவலையே இருந்தது இல்லை. எட்டு மாதத்திலேயே என் பொண்ணு நல்லா நடக்க ஆரம்பிச்சுட்டா.
(தோழியின் சோகத்தை  என்னமா புரிந்து கொண்டு பங்கு எடுத்துகிறா .......)

பக்கத்து வீட்டு நொக்கா:  நல்ல குறைந்த விலை என்று இந்த சல்வார் செட் என் பொண்ணுக்கு எடுத்தேன். அவளுக்கு கலர் பிடிக்கலை, வேண்டாம் என்று சொல்லிட்டா. என் தங்கை மகளுக்கு கேட்டேன். அளவு சரியில்லை. மாடி வீட்டில் வாடகைக்கு குடியிருக்கிறவங்க கிட்டே கேட்டேன். இந்த designil வேறு நிறத்தில் வைத்து இருக்காளாம். என் அண்ணன் வீட்டில் கேக்கலாம்னா இதை எடுத்துக்கிட்டு காசு கொடுன்னு எப்படி கேக்கிறது?  வேற யாருக்கு நல்லா இருக்கும்னு யோசிச்சு பார்த்தேன். உங்க பொண்ணுக்குத்தான் இந்த design கலர் எல்லாம் அருமையாய் இருக்கும். இந்த சல்வார் செட்டில் ரொம்ப அழகா இருப்பாள். வாங்கி கொள்கிறீர்களா?
(ஊரில் இளிச்ச வாய் யாரு? கோவில் ஆண்டி..........)

பக்கத்து வீட்டு நொக்கா: என் மகனை (எட்டு வயது) சினிமாவுக்கு கூட்டிட்டு போறீங்களா? சும்மா இருக்க மாட்டானே. கோக் வாங்கி கொடு, popcorn வாங்கி கொடு, chocolate வாங்கி கொடு, chips வாங்கி கொடு என்று கேட்பானே. எல்லாம் வாங்கி கொடுத்து எப்படித்தான் சமாளிக்க போறீங்களோ?
(எட்டு வயது பையன் கூட புரிஞ்சு நடந்துப்பான் போல இருக்கு. விட்டா இவங்களுக்கும் சேர்த்து வாங்கிட்டு வரச் சொல்வாங்க போல.....)

பக்கத்து வீட்டு நொக்கா:  உங்க friendu குடும்பம் ஊரில் இருந்து வந்தா, எப்படி உங்க ஒத்த பெட்ரூம் apartmentil தங்க முடியும்? உங்க வீடு வசதியா இருக்காதே. லிவிங் ரூமில் (ஹாலில்) படுத்துக்கலாம் என்றால் அதுவும் சின்னதாக இருக்கே. எப்படி சமாளிப்பாங்க?
(வர guestum கவலை படலை. வீட்டில் உள்ளவர்களும் கவலை படலை. இவ மட்டும், கவலை படற மாதிரி பேசிக்கிட்டே எப்படி குத்தி பேசுறா? சந்தர்ப்பம் பாத்து negative comment ஐ வாழை பழத்தில் ஊசி சொருகிறாப் போல சொல்றா....)

என் தோழியின்  புலம்பல்: நான் உடனே அம்மா வீட்டுக்கு வர வேண்டியது இருந்ததால்,  வேறு ஊரில் இருந்து வரும் என் கணவருக்காக , சாவியை பக்கத்து வீட்டில் கொடுத்து விட்டு வந்தேன். திரும்பி போய் பார்த்தால், என் fridge இல் நான் வாங்கி வைத்து இருந்த காய்கறிகள், மீதியிருந்து உள்ளே எடுத்து வைத்து இருந்த உணவு எல்லாம்  என் dining table மேல் இருந்தன. fridge உக்குள் என்ன என்று பார்த்தால், எல்லாம் பக்கத்து வீட்டுக்காரியின் பொருட்கள். நான் சீக்கிரமாக வருவேன் என்று எதிர்பார்க்காதவள், என் பொருட்கள் போனால் போகிறது என்று வெளியே வைத்து விட்டு, அவள் fridge ஐ use பண்ண ஆரம்பித்து விட்டாள். இவளை நம்பி இன்னும் ஒரு நாள் கழித்து போயிருந்தால், இங்கு வீட்டில் குடித்தனமே பண்ண ஆரம்பித்து இருப்பாள்.
(நல்ல வேளை: லீலைகளை dining room ஓடு நிறுத்தி விட்டாள்.......)

பக்கத்து வீட்டு நொக்கா: இப்போதான் மணக்க மணக்க மீன் குழம்பு பண்ணி சாப்பிடலாமேன்னு எல்லாம் ரெடி பண்ணிக்கிட்டு இருந்தேன். பக்கத்து வீட்டு பாட்டி, இந்நேரமா பாத்து மண்டைய போடணும்?
(அவளுக்கு, திரும்பி வரா உயிரை விட திரும்பி வைக்கப் போகிற மீன் குழம்பு முக்கியம்...........)

உங்க பக்கத்து வீட்டில் அக்காவா? நொக்காவா?
அக்காவா இருந்தால், கடவுளுக்கு நன்றி!
நொக்காவா இருந்தால், கடவுள் உங்களை காப்பாற்றட்டும்!

Wednesday, November 11, 2009

nursery rhymes -சின்ன புள்ளதானேனு ஏமாத்தாதீக.

என் ஒரு வயது மகனுக்கு நமக்கு தெரிஞ்ச nursery rhymes, ஏதாவது சொல்லி கொடுத்து, அவன் நம்மை படுத்துறதுக்கு, கொஞ்சம் அவனை நான் பாட்டு பாடி படுத்தலாமேன்னு ஆரம்பிச்சேன். ஒவ்வொரு rhyme ஆ சொல்ல சொல்ல, எனக்கு depression வந்துரும் போல ஆயிட்டு. ஏன்னு கேக்குறீங்களா?

நாம் பொதுவாக வேகமா rhymes சொல்லி இருக்கோமே, என்னைக்காவது என்ன பாடுறோம்னு யோசிச்சு பாத்துருக்கோமா? நீங்க பண்ணி இருந்திருக்கலாம். நான் இப்பதான், வெட்டியா அதை பத்தி யோசிச்சேன். நமக்கு அதுதான் கைவந்த கலையாச்சே.

இந்த rhymes எல்லாம் நான் கை தட்டி action போட்டு பாடிட்டு இருந்ததால, ஜாலி சங்கதின்னு முதல நினைச்சேன். அப்புறமா ரூம் போட்டு உக்கார்ந்து வெட்டியா யோசிச்சா, எதுக்கடா இப்படி சோக பாட்டெல்லாம் நம்ம சின்ன புள்ளைங்களுக்கு சொல்லி கொடுக்குறோம்னு தோணுச்சி. பாருங்களேன்:

prayer பண்ணலைனா, சாமி எப்படியோ, நான் கண்ணை குத்திருவேன்:
Goosey, goosey, gander,
Whither shall I wander?
Upstairs, and downstairs,
And in my lady's chamber.
There I met an old man
Who wouldn't say his prayers!
I took him by the left leg
And threw him down the stairs.


முட்டா பய மகளே, அதான் முதலேயே star என்று சொல்லியாச்சே. அப்புறம் ஏன் அது என்னன்னு wonder பண்ணற என்று என் மகன் திருப்பி கேட்டா?
Twinkle, twinkle, little star,
How I wonder what you are.
Up above the world so high,
Like a diamond in the sky.
Twinkle, twinkle, little star,
How I wonder what you are.


முட்டையும் வாழ்க்கையும் ஒண்ணு. உடைஞ்சு போயே போச்சுனா மகனே, அவ்வளுதான். ஒண்ணும் பண்ண முடியாது. இந்த வேதாந்தம் ஒரு வயசுக்கு புள்ளைக்கு ரொம்ப அவசியம்?
Humpty Dumpty sat on a wall.
Humpty Dumpty had a great fall.
All the king's horses and all the king's men
Couldn't put Humpty together again!

இது தாலாட்டு nursery rhyme ஆ? என்ன கொடுமை, சார், இது?
Hush-a-bye, baby,
in the tree top.
When the wind blows,
the cradle will rock.
When the bough breaks,
the cradle will fall,
And down will come baby,
cradle and all.


சோதனை மேல் சோதனை. போதுமடா சாமி, வேதனைதான் வாழ்க்கை என்றால் தாங்காது, சின்ன புள்ள:
Hush, little baby, don't say a word
Mama's gonna buy you a mockin'bird
If that mockin'bird don't singMama's gonna buy you a diamond ring
If that diamond ring turns brass,
Mama's gonna buy you a looking glass
If that looking glass gets broke
Mama's gonna buy you a billy goat
If that billy goat don't pull,
Mama's gonna buy you a cart and mule
If that cart and mule turn over
Mama's gonna buy you a dog named Rover
If that dog named Rover won't bark
Mama's gonna buy you a horse and cart
If that Horse and Cart fall down,
Then you'll be the sweetest little baby in town

தூங்கும் போதே, புட்டுகிச்சுபா:
It's raining, it's pouring;
The old man is snoring.
Bumped his head
And he went to bed
And he couldn't get up in the morning.


எந்த தண்ணின்னு சொன்னியா? தண்ணி இல்ல, "தண்ணி" அடிக்க போகாதே:
Jack and Jill
Went up the hill
To fetch a pail of water.
Jack fell down
And broke his crown
And Jill came tumbling after.


ஆடா? நாயா?
Little Bo Peep has lost her sheep
And can't tell where to find them.
Leave them alone, And they'll come home,
Wagging their tails behind them.


நம்ம ஊரு contractor,  government உக்கு கட்டுன பாலம், லண்டனிலேயும் இருக்கு:
London Bridge is falling down,
Falling down, Falling down.
London Bridge is falling down,
My fair lady.


இருக்குற நாய்க்கே சோத்துக்கு வழிய காணோம். வந்துட்டாக வரிஞ்சிகிட்டு:
Old Mother Hubbard
Went to the cupboard
To fetch her poor dog a bone;
But when she came there
The cupboard was bare,
And so the poor dog had none.


இந்த விலைவாசியில, economic conditions ல, பால்ல red label  டீயா போட்டு  guests உக்கு கொடுக்க முடியும்?
சும்மா film தான் காட்ட முடியும்.
Polly, put the kettle on,
Polly, put the kettle on,
Polly, put the kettle on,
We'll all have tea.
Sukey, take it off again,
Sukey, take it off again,
Sukey, take it off again,
They've all gone away.


புள்ளைக்கு அலட்டருதுக்கும் பந்தா பண்றதுக்கும் இப்பவே சொல்லி கொடுக்க தேவையா?
அல்டாப்பு அரவிந்தும் பந்தா பரமசிவமும்  பேசி கொள்கிறார்கள்:
Pussycat, pussycat, where have you been?
I've been to London to visit the Queen.
Pussycat, pussycat, what did you there?
I frightened a little mouse under her chair.

ஏழு கழுதை வயசாச்சு, நாமே இன்னும் life அ சரியா புரிஞ்சுக்கல. சின்ன புள்ளைக்கு இந்த nightmare தேவையா?
Row, row, row your boat
Gently down the stream.
Merrily, merrily, merrily, merrily,
Life is but a dream.
ஏழு நாட்கள்ள மூணு நாட்கள் தான் சுமாரா life போச்சு. அப்பறம், ஒரே பேஜார்தான்பா. கடைசியில் சங்கு ஊதிட்டாங்கப்பா. வார நாட்கள் சொல்லி தர வேற பாட்டா கிடைக்கலை:
Solomon Grundy,
Born on Monday,
Christened on Tuesday,
Married on Wednesday,
Took ill on Thursday,
Worse on Friday,
Died on Saturday,
Buried on Sunday:
This is the end
Of Solomon Grundy.


இந்த சின்ன வயதிலேயே violence, இம்புட்டு தேவையா?
Three blind mice,
See how they run!
They all ran after a farmer's wife,
Who cut off their tails with a carving knife.
Did you ever see such a sight in your life,
As three blind mice?


ஆக, தமிழ் சினிமா பாட்டு மட்டும் இல்ல, nursery rhymes ஆ இருந்தாலும் ஆராய்ஞ்சு தெளிஞ்சு, அப்புறமா பச்ச புள்ளைங்களுக்கு சொல்லி கொடுங்க, பெருசுகளே. ஒரு வேளை, இந்த பாட்டெல்லாம் எழுதினது "நந்தா" பட அம்மாவா இருக்குமோ? யார் கண்டா?


Monday, November 9, 2009

Sun Tv யில் comedy என்று comedy பண்றாங்க

தமிழ்நாட்டில் எது ஏதோ செய்ய சுதந்தரம் இருக்கு. ஆனால் உண்மையாக comedy touch ஒட ஒரு criticism செய்ய எந்த அளவு சுதந்தரம் இருக்கு? Ethics, manners, பண்பு என்ற பெயரில் நிறைய comedians' கைய வாய கட்டிதான் போட்டிருக்கு. அரசியல், நாட்டு நடப்பு, சினிமா பற்றியும் அதில் சம்பந்த பட்டவர்களை பற்றியும்  பொதுவாக ஜோக் or comedy track இல் கொண்டு வரலாம். குறிப்பிட்டு பேசுனா, மவனே உன் கதை கந்தல் தான். ஆனால், Canada, USA, Europe போன்ற நாடுகளில் இருக்கும் stand-up comedians க்கு உள்ள நக்கல், தைரியம், உரிமை இன்னும் தமிழ் நாட்டிற்கு வரவில்லையோ என்று தோணுகிறது.

 Sun TV in  "அசத்தப் போவது யாரு?" நிகழ்ச்சியில் உள்ள மதுரை முத்து செய்வதுதான் stand-up comedy என்று ஒரு
 low-standard  set செய்யப் பட்டுள்ளது. குமுதம், விகடன் மற்றும் SMS இல் வரும் ஜோக்குகளை நின்னுகிட்டு தொகுத்து வழங்குவது  மட்டும் stand-up comedy அல்ல. மதுரை முத்து போன்றவர்களின்  comedy யாவது ஒரு கதையில் சேத்துக்கலாம். ஆனால் அந்த நிகழ்ச்சியில் நான்கு வயது ஐந்து வயது பிள்ளைகளை கொண்டு வந்து சுட்டி டிவி நிகழ்ச்சிக்கு போக வேண்டியதை இந்த நிகழ்ச்சிக்கு கொண்டு வந்து, அதுவும் stand-up comedy தான் என்பது, கொஞ்சம் ஓவரா தெரியுது. இதுல, அசத்தல் அசட்டு மன்னன், மதன் பாப்புக்கும் சன் டிவி க்கும் என்ன ஒப்பந்தமோ? 'என் முதுகை நீ சொறிஞ்சு விடு, உன் முதுகை நான் சொரியிறேன்' என்று கொசுக்கடி தொல்லை தாங்க முடியலை.

அதுதான் stand-up comedy என்றால்,   Russel Peters (Canada),  Carlos Mencia (USA), Seinfeld (USA) போன்றவர்கள் செய்யும் stand-up comedy யை என்ன என்பது? ஒரு வேளை, இங்கு கிண்டல் செய்யப்படுபவர்களும் இனத்தவர்களும் அவர்களை போன்றோர் காமெடி செய்யும் போது அதை personal ஆக எடுத்து கொள்ளாமல் ரசித்து சிரிப்பதனால், அவர்கள் சுதந்தரமாக காமெடி செய்கிறார்களோ?

சன் டிவி  "காமெடி டைம்" நிகழ்ச்சியில், என்னவோ இதுவரை தமிழ் திரையுலகில், வடிவேலு வந்து கதவு தொறக்கிற வரைக்கும் காமெடி மடம் அடைச்சி கிடந்த மாதிரி சீனு விடுறாங்க. நாகேஷ் போன்றவர்கள் செய்தது  எல்லாம் காமெடி இல்லையாம். நாகேஷ் போன்றோர்,  நம்மை அதுவும் காமெடினு ஏமாத்தி கிட்டு இருந்ததை சன் டிவி கண்டு புடிச்சுட்டாங்க. திரை உலகில் காமெடி கண்டு புடிச்ச வைகை புயலுக்கே அந்த நிகழ்ச்சிய dedicate  பண்ணிட்டாங்க.

ஒருவாட்டி, மே மாதத்தில், அன்னையர் தின சிறப்பு படமாக, "நந்தா" படத்தை போட்டாங்க பாருங்க. செம காமெடி. அந்த பட climax இல் மகனை புரிஞ்சிக்காம புது வாழ்க்கைக்கு தயாராகிற மகனை, அம்மாவே விஷம் வச்சு கொன்னுடுறாங்க. வாழ்க சன் டிவி! அன்னையர் தினத்தை எதுக்காக கொண்டாடுராங்கனு சொல்லிட்டாங்க, அப்பு. அம்மாவுக்கு புடிச்ச மாதிரி நடக்கலைனா, உனக்கு அம்மாவே சங்கு ஊதிருவா. அதுனால அவக்கிட்ட வச்சுக்காத என்று அன்னை அன்பின் பெருமையை  அந்த படத்தை போட்டு காட்டிட்டாங்க.

இருப்பதில் பெரிய காமெடி:
சன் டிவி நிறுவனம் படம் தயாரிப்பார்களாம்.
அவர்களே TV இல்  advertise  செய்வார்களாம்.
சினிமா promotional publicity க்காக அந்த படத்தில் நடித்தவர்களின் பேட்டிகளை சிறப்பு நிகழ்ச்சிகளாக ஒளிபரப்புவார்களாம்.
அந்த படத்தின் பாடல்களையும் "சிறப்பு கண்ணோட்டம்" என்ற பெயரில் போட்டு கொள்வார்களாம்.
Top 10 மற்றும் Super 10 நிகழ்ச்சிகளில் இந்த படங்களே முதல் இடம் வகிக்குமாம்.
போதா குறைக்கு Sun TV news இல் கூட இந்த படங்களின் ஆர்ப்பாட்டமான success stories தான். அதே ஊர்கள் - அதே theaters - அதே ஆட்டம் - அதே கருத்துக்கள் (ஆஹ், நல்லா இருக்கு; படம் superu னு அழுது வடியற மூஞ்ச வச்சிட்டு சொல்வாங்க பாருங்க......) - I think,  ஆட்கள் கூட அதே ஆட்கள் - அதே கூட்டம். இருக்கலாம், யார் கண்டா?
படம் வெளி வந்து மூணு நாலு மாதத்தில், "இந்திய தொ(ல்)லை காட்சிகளில் முதன்  முறையாக, சட்டியிலிருந்து  வந்த சில மாதங்களே ஆன, super (s)hit ஊசி போன வடை (படம்)" என்று உக்கார்ந்தா நிமிர்ந்தா வர ஒவ்வொரு நிகழ்ச்சிகள், கொண்டாட்டங்கள் எல்லாவற்றிலும் சிறப்பு படங்களாக  போட்டு விடுகிறார்கள். டிவி இல் சீக்கிரம் வரும் என்று தெரிந்தும், சூடா வடை சாப்பிட்டாத்தான் நல்லா இருக்கும் என்பது போல், மறுபடியும் மக்கள் SUN PICTURES  அடுத்த படத்திற்கு படை எடுத்து போவதை காட்டுகிறார்கள். சரியா போச்சு, போங்க. நாங்க நம்பிட்டோம்.......

இதைல்லாம் விட மிக பெரிய comedy, இந்த படங்களுக்கு, "திரை விமர்சனம்" வேறு. அந்த அம்மா, அதே make-up, அதே பேச்சு, அதே விமர்சன வார்த்தைகள், அதே உணர்ச்சியற்ற முக பாவனைகளுடன் புன்னகைத்து  விமர்சனம் என்ற பேரில் comedy பண்ணும் பாருங்க....... அனேகமாக ஒரே விமர்சன format with filling the blanks for actors, directors, movie names and technicians. அந்த அந்த படத்துக்கு உள்ளதை fill-up பண்ணி கொடுத்திட்டா, அந்த அம்மா வந்து ஒப்பிச்சிட்டு போயிருவாங்க. அந்த நிகழ்ச்சியில் கிட்டத்தட்ட முழு படத்தையும்  போட்டுறாங்க.

இந்த அம்மாவுக்கு நேர் மாறா நமக்கு புடிச்ச styla திரை விமர்சனம் பண்ண விஜய் டிவி யில் ஆள் இருந்தார். - ஜெகன்.
"Reel paadhi - Real paadhi" என்ற  programmil கலக்கி கொண்டு இருந்தார். இந்த நிகழ்ச்சியை பற்றி எனக்கு சொல்லிய என் நண்பர், ராதாக்ரிஷ்ணனுக்கு என் மனமார்ந்த நன்றி. எங்கள் வீட்டில் விஜய் டிவி இல்லாத குறையை Youtube பாத்து கொண்டது. நம்ம திரை உலக கண்மணிகளுக்கு அந்த விமர்சனங்கள் பொறுக்கலை. கண்டனம் தெரிவித்து மிரட்டி அந்த நிகழ்ச்சியை நிறுத்த வைத்து விட்டார்கள். அவங்க படங்களை ஜெகன் அருமையாக அறுத்து ஆராய்ஞ்சு விமர்சனம் பண்ணியதற்கு தண்டனையாக "அயன்" படத்தில் ஜெகனுக்கு ஒரு வேடம் கொடுத்து, இவர் வயிற்றை அறுத்து  சாக வைத்து விட்டார்கள். என்ன கொடுமை, சார், இது?

மேல சொன்னவை அனைத்தும் என் கருத்து, என்னோட "feelings" யா.  ஏதோ தமிழ் சேனல் வருதேன்னு, மாசம் $30 தண்டம் அழறதிலே புலம்பிட்டேன். என் கண்ணா, அப்ப சன் டிவி, கே டிவி யை எடுத்திறவா என்னும்போது, எப்பாவது போடற ரஜினி படங்களுக்காகவும்  தப்பி தவறி போடற நல்ல programs க்காகவும் வேண்டாம்னுட்டேன். பாருங்க, சன் டிவி அகராதிப்படி, ரஜினி எழுபதுகளில் மட்டும் நடித்தார். அதுவும் ஆறு  படங்கள்: அன்னை ஒரு ஆலயம், காளி, அன்புக்கு நான் அடிமை, ரங்கா, தங்க மகன், ராணுவ வீரன். அத தாண்டி வர மாட்டேங்குறாங்க.  அது  என் பிரச்சினை. சன் டிவி ரசிகர்கள், அந்த காமெடி நிகழ்ச்சிகளை தொடர்ந்து ஆதரவு கொடுத்து ரசிக்க அவர்களுக்கு முழு சுதந்தரம் உண்டு டோய்........Anyway, சன் டிவி இல் செத்து கொண்டிருக்கும் ரியல் காமெடிக்கு அனுதாபம் தெரிவித்து விட்டு அவர்களது ரீல் காமெடி தான் காமெடி என்று புகுத்துவதை வருத்தத்துடன் பார்த்து கொண்டிருக்கிறேன்.  "சாகடிக்கப்பட்ட" திரை விமர்சகர், ஜெகனுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக:






Saturday, November 7, 2009

தையல் கலை - அப்படின்னா kilo என்ன விலை?

சமையல் கலையை பத்தி எழுதியாச்சு. இன்னைக்கு எந்த கலையில் கைய வைக்கிறது? ஆஹ்ஹ் ..... தையல் கலை.
தையல் -  அது ஒரு கலை.  நேர்த்தியாய் செய்யப்படும் ஒரு அழகு வேலைப்பாடு. 
அது என்னவோ தெரியலை - sewing என்று சொல்லும்போது, அது ஒரு கலையா தெரிய மாட்டேங்குது. ஏதோ கிழிஞ்ச துணி தைக்கிற மாதிரி தான் இருக்கு. 


நான் 9th படிக்கும்போது, Sr.Henrietta உம்  ஒரு தையல் டீச்சரும் மாத்தி மாத்தி வந்து தையல் class எடுப்பாங்க. முதல் நாள் classil introduction for embroidery நடந்தது. "தையல் என்பதற்கு பெண் என்றும் அர்த்தம் உண்டு. ஒவ்வொரு பெண்ணும் கட்டாயம் தெரிந்திருக்க வேண்டிய கலை, இது. ............" 


அந்த வருடத்திற்கு class project,  ஒரு tablecloth க்கு எல்லா corner லேயும் embroidery இல் பூக்கள் போட வேண்டும்.
அதை  நான் போட்டிருக்க மாட்டேன் என்று என்னை நன்கு தெரிந்த எல்லோரும் correctaa guess பண்ணியிருப்பாங்க. மற்ற மாணவிகள்  embroidery போட கற்றுக் கொண்டிருந்த போது, நான் அந்த table clothai வாங்கி என் அம்மாவையும்  என் தங்கை, இந்திராவையும் முடித்து தரும்படி சொல்லி வீட்டில் கொடுத்து விட்டேன். punishment il இருந்து தப்பிக்க, classil என் அருகில் இருந்த தோழியின் tablecloth தின் ஒரு corneril அவள் வேலைப்பாடு செய்து கொண்டிருக்க, மறு முனையை desk க்கு அடியில் விட்டு மேலே என் பக்கமாக இழுத்து அது வேறு table cloth மாதிரி  நான் சும்மா பிடித்து கொண்டிருப்பேன். ஊசியில் நூல் கோர்த்து, நூலின் இறுதியில் முடிச்சு போடாமலே சும்மா ஊசியை வைத்து  குத்தி இழுத்து தைப்பது போல் பாவனை செய்தேன். 
அதனால்தானோ என்னவோ, இன்றுவரை embroidery னு  spelling தவிர வேறு எதையும் தெரிந்து கொள்ளவில்லை. 


தையலில் பல வேலைப்பாடுகளை கற்று தையல் ராணிகளாய் இருப்பவர்களை கண்டு அதிசயப் பட்டிருக்கேன். எங்க ஊரிலே நான்கே இந்தியன் குடும்பங்கள். அதில் பெல்லா, தையல் கலையில் கை தேர்ந்த  தையல். 
நூலை நெருக்கமா வச்சு தையல் போடுறாங்க - அதுதான் embroidery.
நூலை ஒரு  துணியில்  ஷேப்பா வெட்டி தைக்கிறாங்க - 
அதுதான் dress.
நூலை வைச்சு ஒரு  துணியை பல துணிகளோடு ஒட்டு போட்டு 
தைக்கிறாங்க - அதுதான் quilt.
நூலை வச்சு ரெண்டு மெலிஞ்சு போன கில்லி குச்சி வச்சு லூசா ஆட்டுறாங்க  - அதுதான் crochet. 
நூலை ரெண்டு பெரிய குத்தூசி மாதிரி இருக்கிற - நம்ம ஊரில் வெள்ளிகிழமையோ சனிகிழமையோ மட்டும் சில பெண்கள்,  தலைக்கு குளிச்சிட்டு, அது அந்த தெருவுக்கே தெரிய மாதிரி நின்னுகிட்டு,  ஒரு சிணுக்குவாரியோ சிணுக்கொலியோ வச்சிக்கிட்டு சிடுக்கு சிக்கு எல்லாம் எடுப்பாங்களே - அந்த மாதிரி ரெண்டை வச்சிக்கிட்டு - கோலாட்டம் அடிக்கிற மாதிரி பண்றாங்க - அதுதான் knitting. 
இப்படி பல வித்தைகளை நூல் கண்டில் செஞ்சு காட்டுறாங்க. 


எனக்கு வீட்டில் ஊசி நூல் வச்சுக்கவே யோசனையாய் இருக்கு. நம்ம வெட்டி பேச்சு தொல்லை தாங்க முடியாம யாராவது என் வாயை சேத்து வச்சு தைச்சிட்டுங்கன்னா? எதுக்கு வம்பு? வேணாம், அப்பு - வேணவே வேணாம்.


அது போகட்டும். இப்ப என் மூளை ஏன் எங்க தையல் டீச்சர் சொன்ன முதல் நாள் introduction வார்த்தைகளை மட்டும் இன்னும்  நினைவு வச்சிருக்கு. ஆனால் அவங்க கத்து கொடுத்த embroidery யை நினைவு வச்சுக்கலை? 
அந்த topic இல் ஆராய்ச்சி எல்லாம் பண்ணுது. அதுக்கு மேல போய் தையல் கலையை கத்துக்க மட்டும் மாட்டேங்குது.  பெண்ணை ஏன் தையல் என்று சொல்கிறார்கள்?  தையல் என்ற வார்த்தை பெண் என்றும் அர்த்தம் கொள்ளும் என்றால்,  தையல்காரன் என்ற வார்த்தை யாரை குறிக்கும் - என்ன அர்த்தம் கொள்ளும்?  பெண்ணுக்கு தையல் மாதிரி, ஒரு ஆணுக்கு கலைகளில் எந்த பெயர் பொருந்தும்? ஏன் தையல் என்ற தமிழ் வார்த்தையை நிறைய பேர் இப்ப use பண்ண மாட்டேங்குறாங்க? தையல் என்று சொன்னாலே என் மூளை,  நூல் கண்டில் சிக்கல் விழுந்தது போல் ஆகிறது.


அன்னைக்கும் இன்னைக்கும் எனக்கும்  தையலுக்கும் ஒரே போராட்டம்தான்.
தையல்னு  சொன்னியே எந்த தையல்னு சொன்னியானு கேட்காதீங்க. நூலை வச்சு - ஊசிய வச்சு - மேல குத்தி கீழ இழுத்து - கீழ குத்தி மேல இழுத்து - முடிச்சு போட்டு - இப்படி சுத்தி - அப்படி சுத்தி - கிட்டிபுல் விளையாண்டு - சிக்கு எடுத்து - சிடுக்கு போட்டு - கும்மி அடிச்சு - கோலாட்டம் ஆடி -  நேர்த்தியா பண்றாங்களே - அந்த தையல்தான்.

Friday, November 6, 2009

என்ன சொல்லி நான் எழுத....







நான் இந்த blog எழுத ஆரம்பித்த போது எடுத்து கொண்ட theme:


என் வாழ்க்கையில் நடந்த, நான் கேள்விப்பட்ட, என்னை பாதித்த (?!), என்னை யோசிக்க (??!!) வைத்த விஷயங்கள் மற்றும் நான் சந்தித்தவர்களுள் எனக்கு interesting ஆக தோன்றிய personality or characters பற்றி எழுத வேண்டும். இவற்றின் அல்லது இவர்களின்  மூலமாக நான் கற்றுக் கொண்ட வாழ்க்கை பாடங்களையும் ரசித்து சிரித்த தருணங்களையும் வேடிக்கை அனுபவங்களையும்  நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதுதான்.


When you see the lighter side of life, you know that life is funny and silly too.
"உன்னால் முடியும் தம்பி" - சிலர் இந்த உற்சாக வார்த்தைகளை வேத வாக்காகவே எடுத்து கொண்டு முடித்து காட்டுகிறார்கள். அவர்கள் முடித்த பின் ...........????!!!!!!

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சுதான். இருந்தாலும்...............????!!!!
தன்னம்பிக்கை மனஷனுக்கு  தேவைதான். அதுக்காக அதை ஒரேயடியாய் நம்பி உள்ளதும் போச்சு கொய்யால என்று இருக்க முடியுமா? 
"If you don't have anything nice to say about anybody, then say nothing."  But it is so hard to keep quiet at times.

இன்னைக்கு என்ன ஒரே உளறல் என்று கேக்கிறீங்களா? 

Z தமிழ் டிவி இல் ஒரு தமிழ் படம், "யாருக்கு யாரோ" வந்ததாம். அந்த படத்தின் ரெண்டு பாடல்களை பார்த்தேன். என்ன சொல்லி அந்த பாடல்களை justify பண்ணுவது என்று தெரியாமல் உளறி கொண்டு இருக்கிறேன். I am trying to be polite. but..........................
ரெண்டு பாடல்களுக்கே இப்படினா, படம் முழுதும் மிஸ் பண்ணிட்டேனே.......
ஹீரோ: யாரை பற்றியும் எதை பற்றியும் கவலை படாத சங்கம் தலைவர்:  
"நைஞ்ச தளபதி":  Sam Anderson



heroine: "இப்போதான் தூங்க வந்தேன்,  அதுக்குள்ள விடிஞ்சிடுச்சா?" புகழ்: 
                                 விடியா மூஞ்சு அழகி:  Varnica
costumes: Muniyaandi and sons Textiles, கையிருப்பான்பட்டி 
choreography: மூணாம் கிளாசை மூணு முறை படித்த மாணவனும் மாணவியும். நோஞ்சான்பட்டி மிடில் ஸ்கூல், நோஞ்சான்பட்டி.
(video) cameraman: சாரி, வீடியோ காமெராவை tripodil வச்சுட்டு ஆளு எஸ்கேப் ஆயிட்டார்.
producer cum director cum audience: 
               நொந்த நூடுல்ஸ்சன் 
ஹான் ............. வந்திருச்சி!
திருவாளர்  சாம் அன்டேர்சன் அவர்களே, எனது எல்லா கவலைகளையும் மறக்க வைத்ததற்கு நன்றி. 
எனக்கு தாழ்வு மனப்பான்மை ஏதாவது இருந்திருந்தாலும் அதை ஒழிக்க உதவியதற்கு நன்றி. 
மனம் விட்டு சிரிக்க வைத்ததற்கு நன்றி. நீங்கள் இன்னும் இது போல நிறைய படங்கள் நடித்து மக்களை சந்தோஷமாக வைத்து கொள்ள வேண்டும். 
மக்களே, இப்போ நீங்களும் என்ஜாய்................... இதற்கு முன் பாத்திருந்தாலும், மீண்டும் காண தூண்டும்...... This is entertainment!




(ராசாத்தி ....)


(நெஞ்சம் மகிழும்....)
ஆமாம், இந்த படம் ரிலீஸ் ஆச்சா? எத்தனை நாட்கள் ஓடியது? எத்தனை பேர் பார்த்தார்கள்? படத்துக்கு எவ்வளவு வசூல் ஆச்சு? producers and distributors போட்ட காசை எடுத்தாங்களா? ஐயோ, எனக்கு கவலையாய் இருக்கே.......கவலைகளுக்கு உடனடி நிவாரணி:  இருங்க, ஒரு நிமிஷம் திரும்ப அந்த ரெண்டு பாட்டுகளையும் பாத்துட்டு வந்திடுறேன். என் friend, அமுதா தமிழினி, "சித்ரா, ஏன் இந்த தற்கொலை முயற்சி?" என்று துபாயில் இருந்து அலறுவது கேட்குது..........."அன்டேர்சன் அண்ணா, தமிழ் நாட்டு சினிமா ரசிகர்கள் மிச்சம் மீதி இருக்குறவங்களை உங்க கையில் புடிச்சி கொடுத்திட்டேன்."



Wednesday, November 4, 2009

மக்கள் வயித்தை கலக்க போவது யாரு - ஒரு அரசியல் பார்வை


விஜய் அன்டோனியின், "ஆத்திச்சூடி ... ஆத்திச்சூடி  ...... இது new age ஆத்திச்சூடி !" பாடலில் வரும் நியாயமான கேள்வி போல், "என்ன சித்ரா, நீங்க எப்ப பாத்தாலும் உங்களை பற்றியே எழுதிக்கிட்டு இருக்கீங்களே. அரசியல் பத்தியும் நாட்டு நடப்பை பற்றியும் எப்ப எழுத போறீங்கனு தெரியுமாஆஆஆஆ.??????" னு கேக்கிறவங்களுக்கு: "கேளு, மக்களே கேளு - வாயை மூடிக்கிட்டு கேளு -  மாலு நகி மாலு - அரசியல் நகி மாலு. இந்த bloggai படிச்சு புட்டா உனக்கு முளைக்கும் வாலு!" என்று அந்த பாடலில் இருந்தே அநியாயமான பதிலும் copy அடிச்சுட்டு எழுதுறேன்.

இன்னொரு காரணமும் உண்டு. நாளைக்கு யாராவது, நாட்டுக்கு நீ என்ன செய்தாய் என்று கேட்டால் அரசியல் கட்சிகள்  பற்றி ஆராய்ந்து எழுதி இருக்கிறேன் என்று சொல்லலாம் அல்லவா? நிறைய பேர் இப்படித்தான் நாட்டு மேல அக்கறை கொண்டு பாட்டு எழுதிறாங்க, blog எழுதுறாங்க, பேட்டி கொடுக்கிறாங்க, வசனம் பேசுறாங்க, புலம்புறாங்க, திட்டுறாங்க, ஏன் - ஒரு படி மேல போய் உண்ணாவிரதம் கூட இருக்குறாங்க ....... இதெல்லாம் மாற்றம் ஏதும் கொண்டு வராத வழிமுறைகள் - ஆக்கப் பூர்வமாக நாட்டுக்கு துரும்பை கூட எடுத்து போடாத வெட்டி பேச்சு என்று தெரிந்தும் ...................

பாரதியார் பாடல்கள்,  காந்தியடிகள் பேச்சு, திருப்பூர் குமரன் செயல் எல்லாம் வெள்ளையனை வெளியேற்றி சுதந்தரம் பெற்று தரும் - புரட்சி வரும் அளவுக்கு -  அனலுடன் இருந்தன.  நம் blogging,  "நாட்டு நடப்பு" reality மறக்க
நல்ல time-pass. சூப்பர் திண்ணை பேச்சு - டீ கடை பெஞ்சு அரட்டை.

புது Blogger சித்ராவின் பேட்டி: "அரசியல் சேட்டை" பத்திரிகை நிருபர் வருகிறார்.

நிருபர்:   வணக்கம்.
சித்ரா:    வணக்கம். கொஞ்ச blog matter வந்ததிலேயே, இப்படி ரித்தீஷ் மாதிரி பேட்டி கொடுக்கும் அளவு வருவேன்னு எதிர் பாக்கலை. எல்லாம் அந்த ஆண்டவனுக்குத்தான் நன்றி சொல்லணும். இவ்வளுவுக்கும் நான் அம்பது ரூபா கூட செலவு பண்ணலை. பிரியாணி பொட்டலம் ஒண்ணு கூட வாங்கி கொடுக்கலை.

நிருபர்:   மன்மோகன் சிங் ஆட்சி பத்தி?
சித்ரா:    அவங்க ஆச்சி உயிரோட இல்லை. சோன்யா காந்தி மேடம் அவங்க ஆச்சி வயசு இல்லை. அதானல அவர் ஈன குரலில் strongaa ஏதாவது பேசி செய்ய முயற்சிக்கிரார்னு நான் நினைக்கிறேன்.

நிருபர்:    ADMK future?
சித்ரா:     அம்மா செல்வியா ஏன் இருந்தோம்னு நினைக்கிறாங்க. வாரிசு அரசியல் policy பத்தி தெரியாம தத்து எடுத்த புள்ளையையும் விலக்கிட்டு அவங்க futureaiye கேள்வியா பாக்கிறாங்க. சசிகலா வயசு கம்மினாலும் ஏதோ பொண்ணு role ல சமாளிக்கலாம். அதுக்கும் வழியில்லை. என்னதான் close ஆனாலும் தோழி வேறு; குடும்பம் வேறு.

நிருபர்:     நீங்க ADMK future பற்றி கேட்டா, ஜெயலலிதா future பற்றி பேசுறீங்க.
சித்ரா:      ADMK வேறு; ஜெயலலிதா வேறா? என்ன சொல்றீங்க? ஜெயலலிதாவுக்கு அப்புறம் ADMK நிலைமை என்னன்னு அந்த அம்மாவே யோசிக்காதபோது நான் ஏன் யோசிக்கணும்?

நிருபர்:     நீங்க விஜயகாந்த்'s DMDK கட்சியை ஆதரிக்கிறீர்களா?
சித்ரா:      கேப்டன் களம் இறங்கிட்டாரு. அவர் இரண்டு மகன்களும் இன்னும் கொஞ்சம் பெரிதானதும் முழு மூச்சா DMK குடும்ப அரசியல் மாதிரி வர நல்ல வாய்ப்பிருக்கு.  இதுக்கு மேல என் கருத்தை சொல்லி நான் ஆதரிக்கிறேனா இல்லையானு  என் ரசிகர்களை influence பண்ண நான் விரும்பலை.

நிருபர்:    ப.ம.க.????
சித்ரா:     பக்காவான  மங்கி (monkey) கட்சி.  இவருக்கு மற்ற கட்சிகளின் support வேணும்னு மரம் விட்டு மரம் தாவுவார். மக்களுக்கு அப்படி ஒரு கட்சி இருக்கு, அப்படி ஒரு கட்சி தலைவர் இருக்காருன்னு மறந்திட கூடாதுன்னு அறிக்கை மேல அறிக்கை விட்டு attendance கொடுப்பார். குடும்ப அரசியல் பண்ண மாட்டேன்னு ஆரம்பத்தில்  ராமதாஸ் சத்தியம் பண்ணினதாக ஞாபகம். அவர் மகன் MP ஆகலையா? அரசியல் வாழ்க்கையில் இதெல்லாம் சகஜமப்பா......

நிருபர்:     சரத் குமார் கட்சி பற்றி?
சித்ரா:      அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி  (அ.இ.ச.ம.க. - a.k.a. - அகில இளிச்ச சன மங்கி (monkey) கழகம்) என்று ரூம் போட்டு யோசித்து ஒரு கட்சி பெயரை வச்சிருக்கார். மொட்டையா சரத் குமார் கட்சின்னு நீங்க மட்டும் இல்லை, எல்லாரும் சொல்றது சரி இல்லை. 16 வயதினிலே படத்தில் சப்பாணி கமல், மயிலிடம், "என்னை யாரு கோபால்னு கூப்பிடுறா? சப்பாணி சப்பாணினுதான் கூப்பிடுறாங்கன்னு" அங்கலாச்ச மாதிரி நேத்து கூட சரத்குமார் என்ட்ட புலம்பினார். கட்சி பெயரையே மக்கள் தெரிஞ்சிக்க முயற்சிக்கலை. கட்சியப் பற்றி?

நிருபர்:    அப்போ கார்த்திக் கட்சியை பற்றி?
சித்ரா:      ஒரு நிமிஷம். (google....google.....google....)
அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி - All India Parliamentary People's Party - 
(AIPPP) - அய்யோ பாவம் பரிதாபம் party.
 இதுவும் ஒரு கட்சி; அதுக்கும் ஒரு தலைவர்னு இருக்க விடுறாங்களே.  serious அரசியலுக்கும் வாழ்க்கைக்கும்  ஒரு comedy relief தேவைதான். அதுக்காக இப்படியா? அவர் comedy kingaa இல்ல அவர் கூட கூட்டணி வச்சிருக்கிற சரத்குமார் comedy kingaa னு ஒரு போட்டி வைக்கலாம்.

நிருபர்:     இப்போ ஒரு முக்கியமான கேள்வி: DMK பற்றி?
சித்ரா:       நாட்டை கொள்ளை அடித்து சேர்த்து வைத்த சொத்தை மட்டும் இல்லை -  நாட்டையே பங்கு போட்டு பிரித்து கொடுத்த ஒரு "உயர்ந்த" தமிழ் வரலாற்று நாயகனை குறித்து நான் என்ன சொல்ல முடியும்? அரசியல், குடும்பம், டி.வி., சினிமா, இலக்கியம், வியாபாரம் சேர்ந்த ஒரு கதம்ப குடும்பம்,  நாட்டை ஆள்கிறது. ஜன நாயக ஆட்சியா? அப்படினா இப்படிதான் போல  என்று மக்கள் நினைக்கும் அளவுக்கு அர்த்தம் மாற்றத்  தெரிந்த சூத்திரதாரர்கள். மனைவி, துணைவி, இணைவி மற்றும் அவர்கள் மூலமுள்ள வாரிசுகள் கொண்டு நடத்தப்படும் action packed குடும்ப சித்திரம். இந்த மெகா மெகா சீரியல் இன்னும் எப்படியெல்லாம் போகும்? சிந்துபாத்திடம் கேட்க வேண்டும்.  மூன்றோடு  (அல்லது மூன்றை மட்டும்) நிறுத்திக் கொண்டதற்காக,  நான் தமிழ் மக்கள் சார்பாக கட்சி தலைவருக்கு  நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன். மனைவி, துணைவி, இணைவி மாதிரி அடுத்த  decent தமிழ் வார்த்தை அதிகார பூர்வமாக தமிழில் அறிமுகப் படுத்திவிட்டு தொடருமோ என்னவோ? தமிழ் வாழ்க!

நிருபர்:      நீங்க ஏன் நக்கலாவே பேசுறீங்க?
சித்ரா:       இதெல்லாத்தையும் சகிச்சுகிட்டு சினிமா, டி.வி. மோக போதைகளில் சுயநல லாபங்களில்  தன்னை அடகு வைத்து இருக்கும் தமிழ் மக்களிடம் இல்லாத நக்கலா? லொள்ளா? குசும்பா? தமிழ் வாழ்க! தமிழ் நாடு வாழ்க! தமிழ் மக்களை ஏலம் விட்டு வாழும் கட்சி தலைவர்கள் வாழ்க! இவர்கள்தான் அரசியல்வாதிகள் என்று வரை படுத்தி கொண்ட ஜன நாயகம் வாழ்க!

நிருபர்:      நன்றி. கடைசியா ஒரு கேள்வி.  நீங்க அரசியல் கட்சி  எப்ப ஆரம்பிக்க  போறீங்க?
சித்ரா:       பிரியாணி பொட்டலம் வாங்க sponsors கிடைக்கணும். ஒரு டி.வி. சேனல் ஆரம்பிக்கணும். இப்போ கிண்டல் பண்ண அத்தனை கட்சிகளோடும் சந்தர்ப்பம் பார்த்து கூட்டணி வைக்க சந்திச்சு பேசணும். எனக்கு அடைமொழி பெயர்கள் கொடுக்க நண்பர்களிடம் கெஞ்சணும்.  வசூல் ராஜாக்களை சந்திக்கணும். publicity க்கு ஏதாவது ஏடாகூடமாக நடத்தி  காட்டணும்.  போஸ்டர் எழுத ஒட்ட ஆள் பிடிக்கணும். அறிக்கை நிறைய விடணும்.  ஒரு universitya சரி கட்டி doctor பட்டம் வாங்கணும். எல்லாத்துக்கும் மேல சினிமாவில் ரெண்டு படமாவது நடிக்கணும். போங்க சார். எனக்கு இப்ப அதுக்கெல்லாம் டைம் இல்ல. வந்ததும்............

Monday, November 2, 2009

தம்பி, தங்க கம்பி.....(paasakiligal)

தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.............

மத்தவங்களை பத்தி தெரியலை. எந்த படைக்கும் நான் அஞ்சேன். Saibol இல்லைனாலும் இன்னொரு prescription strength medicine கொடுத்து என்னை காப்பாத்திடுவான். தம்பியே டாக்டரா இருந்தா அப்படி ஒரு வசதி.

என் ஒவ்வொரு இந்தியா trip பையும் கலகலப்பாக மாற்றி அடுத்து எப்போடா போவோம்னு எதிர் பார்க்க வைப்பதில் என் தம்பிக்கு ஒரு பெரும் பங்கு உண்டு.  இன்று என் தம்பியின் companyai ரொம்ப தேடுகிறது.

நான் தமிழ் பாடங்களில் செய்யுளை படிக்க திணறிக் கொண்டிருந்த போது, செய்யுளின் இலக்கணம் அறிந்து, வெண்பா உட்பட சில செய்யுட்களை அவனே உருவாக்குவான். அவனுடைய கவிதைகள், நாடகங்கள். நடிப்புக்கு நான் முதல் விசிறி. He is a performer.

மூன்று வருடங்கள் முன்பு வரை நானும் அவனும் சேர்ந்து போனால், சகோதரி சகோதரன் போகிறார்கள் என்று சொல்லியவர்களை விட குண்டோதரியும் குண்டோதரனும் போகிறார்கள் என்று சொல்லியவர்கள்தான் அதிகம். யார் கண் பட்டதோ - இப்போ அவன் diet, exercise, healthy measure என்று சொல்லி அவன் மட்டும் மெலிந்து - - - comedy piece மாதிரி இருந்தவன், சூப்பர் ஹீரோ மாதிரி மாறிட்டான். நல்லா இருக்கட்டும்.

மூளையே தனியா முட்டை போட்டு அறிவு குஞ்சுகளை பொரித்து எடுக்கும் அளவுக்கு examsukku படிப்பான். ஆனால் exams எழுதி முடித்த கையோடு அன்று இரவே நைட் ஷோ ஒரு படத்துக்கு போவான் பாருங்க ...... தியேட்டரில் ரிலீஸ் ஆகி    மூன்றே நாட்கள் ஓடிய - தியேட்டரின் projector operator உட்பட பத்தே பேர் ஒரு காட்சி வீதம் பாத்த படங்கள் லிஸ்டில் உள்ள - படமாக இருக்கும். "ஏண்டா? அப்படி ஒரு படம் பாக்க போன?" என்று கேட்டால், "மூளை இப்பதான் balanced levelukku வந்திருக்கு. ஓவரா படிச்சிட்டேன். இந்த படம் பார்த்த பிறகு சரியா இருக்கு" என்பான்.

எந்த exams எழுதினாலும் first rank or gold medal  வாங்கும்படி கடவுள் அவனுக்கு ஆசிர்வாதம் தந்திருக்கிறார். ஆனால் நான் அவனிடம், அப்பா அம்மாவிடம் இருந்து intelligence genes,  எனக்கு  அதிகம் எடுத்து கொள்ளாமல், என் share ஐயும் சேர்த்து அவனுக்கு கொடுத்து விட்டாதாக சொன்னாலும் எனக்கு நன்றி சொல்லுவான்.

அவனுக்கு உள்ள கிரிக்கெட் பைத்தியத்திற்கு treat செய்ய  அவனே psychiatrist ஆயிட்டான்னு கேலி பண்ணி கொண்டிருந்ததை, இன்னொரு ஆத்மா என்னை தட்டி, உன்னை அக்காவை வச்சிக்கிட்டு அவன் வேற என்னவா ஆவான் என்றதும், நிறுத்தி விட்டேன்.

நாங்கள் சண்டை போட்டு கொண்ட நாட்களை விட ஒருவரை ஒருவர் மொக்கை  - கடி - போட்டு "காயப்" படுத்தி கொண்ட நாட்கள் அதிகம். நாங்கள் இருவரும் சேர்ந்து பேசும் போது,  வயசு, சைசு, படிப்பு, பொறுப்பு, வித்தியாசம் எல்லாம் மறைந்து உள்ளே தூங்கி கொண்டிருக்கும் குழந்தை தனம் விழித்துக் கொண்டு விளையாட ஆரம்பித்து விடுகிறது. என் தம்பிக்குள் ஒரு நண்பனை காண்கிறேன்.

எந்த ஒரு சூழ்நிலையிலும், சின்ன பிள்ளைகளாகவே இருந்திருக்க கூடாதா என்று ஏங்குவதை விட, நம்முள் இருக்கும் குழைந்த தனமான குறும்பு உணர்வுகளை வெளியே கொண்டு வரும் உறவுகளை அடையாளம் கண்டு கொண்டால் என்ன? அவர்களோடு இருக்கும் போது பெரியவர்களின் கோப தாப - ஈகோ - மரியாதை - எதிர்ப்பார்ப்புகளை மூட்டை கட்டி வைத்து விட்டால் என்ன?

என் தம்பியை அடுத்த  முறை சந்திக்கும் போது கண்டிப்பாக ஒரு தேங்காய் மாங்காய் பட்டாணி  சுண்டல் பொட்டலம் வாங்கி பங்கு போட்டு சாப்பிட வேண்டும் - பங்கு பிரிக்கும் போது சண்டை போட வேண்டும் - சண்டையில் சுண்டல் கீழே விழ வேண்டும் - கோபத்தில் அவனை திட்ட வேண்டும் - அம்மாவிடம் தம்பியை பற்றி குறை சொல்ல வேண்டும் - வேறு பொட்டலம் வாங்க வேண்டும் - அவனுக்கு கொடுக்காமல், "வெவெவ்வே..." சொல்ல வேண்டும் - சுண்டல் சாப்பிட்டு விட்டு அவன் சட்டையில் கைய துடைக்க வேண்டும் - அவன் அடிக்க வரும் போது ஓட வேண்டும் - அவன் மனைவியிடம் நானும் என் கணவரிடம் அவனும் முறையிட வேண்டும் ...................

Sunday, November 1, 2009

இட்லிக்கு அஞ்சலி

சென்னையில் இருந்து ஒரு செய்தி:

வாசிப்பவர்: Mrs. அலட்டி பந்தாகிருஷ்ணன்.

வாசித்த இடம்: மால்குடி உணவகம் in Hotel Savera,  சென்னை.

பல upper middle class வீடுகளில் இட்லி என்ற சிற்றுண்டி இனம் அழிந்துவிட்டது. அதை காப்பாற்றும் முயற்சியாக ரத்தம் ஏற்றுவது போல இட்லியுடன் red food coloring chemical கொஞ்சம் சேர்த்து இட்லியின் தன்மையான தென்னிந்திய ருசியை எடுத்து விட்டு சைனீஸ் டிஷ்ஷாக சில்லி இட்லி என்று plastic surgery செய்தும் பயன் இல்லை.
இன்றைய இளைய தலைமுறைக்கு pizza மற்றும் burger, breakfast ஆக கூட  சாப்பிடும் அளவுக்கு இருக்கும் ஆசை இட்லி சாப்பிடுவதில் காட்டாததால் என் (அலட்டி)  வீடு உட்பட பல வீடுகளில் இட்லிக்கு மங்களம் பாடப் பட்டு விட்டது.
15 வயது அமர்க்களா, நுனி நாக்கு டமிலுலும் stylish Englishilum சொல்லியதாவது: "You know, idlies were never popular among younger generation. oh, no. அத எப்டிதான்  சாப்பிட்டன்களோ? idlies are DEAD. you know, it is simply dead and gone."  இத்துடன் இன்றைய காலை உணவு செய்திகள் முடிவடைந்தது.

WHOA!  WHAT DID SHE JUST SAY?
ஆமாங்க, BELIEVE IT OR NOT, இது நிஜமாவே எங்கள் தமிழ்  நண்பர் ஒருவரின்  மனைவியும் அவர் மகளும் சொல்லியவை. அமெரிக்காவில் இருந்து வந்த பட்டிக்காடு, தன்  மகளுக்கு இட்லி ஆர்டர் செய்துவிட்டு காத்திருந்தபோது சொல்லப்பட்ட இந்த செய்தி அதிர்ச்சியை தந்தது.
சென்னையில் சில வீடுகளில் இட்லி இறந்த (or கொல்லப்பட்ட) செய்தியை கேட்டு மனம் வருந்துகிறேன். இன்று இட்லிக்கு அஞ்சலி செய்யும் விதமாக நீண்ட வெட்டி பேச்சை சுருக்கியிருக்கிறேன்.  கட்டி தேங்காய் சட்னி,  சூடான சாம்பார், நேத்து வச்ச மீன் குழம்பு எல்லாம் வேறு துணை  தேட வேண்டிய நேரமிது...........இட்லி பொடி பெயரையே மாற்ற நேரிட அநாதையானது.........நல்லவேளை, தமிழ்நாட்டில் இன்னும் சில பழங்குடியினர் வாழ்ந்து வருவதால், அவர்கள் வீட்டில் இட்லி தஞ்சம் புகுந்து இன்னும் அழிந்து போகாமல்  உள்ளது.