Thursday, October 29, 2009

சல்வார் fashion

பாட்டியாலா, கீதாஞ்சலி, அனார்கலி, மஜாகலி, தெனாலி, பங்காளி, பெருச்சாளி...........
இதெல்லாம் என்ன?  இதெல்லாம் பெண்களிடேயே popular ஆக இருக்கும் உடைகளுக்கான styles.
இத தெரியாதவர்கள் எல்லாம் மொத்தமா சல்வார் செட் என்று சொல்லிட்டு போய்க்கிட்டே இருப்பாங்க.

வெறும் சல்வார்னு சொன்னா மதிப்பு இல்லையாம். latest ஸ்டைல் டிசைன் வாங்கியிருக்கீங்கன்னு உலகத்துக்கு நீங்க சொல்ற code word message தான் இந்த பெயர்கள்.

வேற ஒண்ணும் இல்லைங்க. சல்வார் சல்வார்தான். அத tightaa - loosaa - குட்டையா - நீளமா - பெருசா -  சிறுசா - நேரா - கோணலா-  sleeves இல்லாம -  ஸ்லீவ்ஸ் வைத்து -  குட்டை ஸ்லீவ்ஸ் - முழங்கை ஸ்லீவ்ஸ் -  முழுக்கை ஸ்லீவ்ஸ் -  வழுக்கை ஸ்லீவ்ஸ் - சுருக்கு வைச்சு - சுருக்குனு இல்லாம -  சாக்கு துணியில - மீன் புடிக்கிற நெட்டுலனு தச்சு போட்டுக்கிட்டு வாயில நுழையாத பேரையோ வட நாட்டுக்காரன் ஏதோ உளறிட்டு போன பேரையோ வச்சீங்கனா அதான் அடுத்த தீபாவளி fashion ஆயிடும். ஹிட் ஆச்சுனா எனக்கும் ஒரு 10% share கொடுக்க மறக்காதீங்க.

அப்போ உன்ட்ட என்ன சல்வார் ஸ்டைல் இருக்குன்னு கேக்குறீங்களா?
 - பில்லொகவெரில்லி -  pillowcoverilli தான்.

நான் ஊரில் ஷாப்பிங் போகும்போதே, என் தோழி கீதா: "சித்ரா, நீ RmKV Pothys போனீனா selections உனக்கு ஏத்த மாதிரி   நிறையா இருக்காது. பேசாம உனக்கு புடிச்ச மாதிரி fabric materials வாங்கி தச்சிரலாம்."
அப்பவே எனக்கு warning சிக்னல் அடிக்கிராள்னு புரிஞ்சிருக்கணும். ஆசை யாரை விட்டது?
உன் sizekku இதெல்லாம் over. கடையில கூட கிடையாதுன்னு சொல்லாமல் சொல்லியும் துணி வாங்க போனேன்.
நிறையா கல்லு பாசி ஊசி குண்டுமணி குந்தன்மணி கவுண்டமணி வைத்தெல்லாம் வாங்கினேன்.

ஒரு வழியா எனக்கு அளவு எடுக்கிற அளவுக்கு measuring tape வைத்துள்ள tailorai கண்டு புடிச்சு தைக்க கொடுக்க போனேன். Tailor ஐயாவுக்கு நான் எதுக்கு வந்திருக்கேன்னு புரியலை. என்னையும் பார்த்தார். என் துணியையும் ..... sorry, fabric materials ஐயும் பார்த்தார். ஏதோ நான் கன்னியாகுமரி கடை தெருவில் இருந்து souvenir shoppil அள்ளிட்டு வந்த பாசி துணி மூட்டை மாதிரி அவருக்கு தோணியிருக்கு.
"நான் curtain தைக்கிறது இல்லை."
"curtain இல்லைங்க. சல்வார்."
"துணி இவ்வளுவு இருக்கு. 2 சல்வார் ஒரே மாதிரியா?"
"இல்லங்க  இது எனக்கு தான். சல்வார் ஒன்னு லேட்டஸ்ட் மாடல் or பெயரில் தச்சு கொடுங்க."
மேலும் கீழும் பார்த்தார். off seasonil வர customerai ஏன் விடுவானேன்?
"சரிங்க. 3 வாரம் கழிச்சு வாங்க."

ஆமா, சல்வார் தைக்க மூணு வாரம் எதற்கு? அவர் சிரித்து முடிக்க இரண்டரை வாரம். சல்வார் தைக்க மூணு நாட்கள். சரிதான். நல்ல  வேளை. தையல் கூலி இரண்டு மடங்காக கேட்கவில்லை. எனக்கு சந்தோஷம்.

மூணு வாரம் கழித்து, தைத்து வந்த சல்வாரை வீட்டில் போட்டு பார்த்தேன். என்னவோ  pattern என்னவோ  design னு போட்டுட்டு பாத்தா தலையணைக்கு உறை தச்சு போட்ட மாதிரி தான் இருக்கு. பம்முனு.....கும்முன்னு......
tailor ஐயா என்ன பண்ணுவார் பாவம்.

Aishwarya Rai size உள்ளவருகளுத்தான் அனார்கலியும் தெனாலியும் என்று latest fashion கவலை. என்னை போல் உள்ளவர்க்கு ஒரே மாடல் - ஒரே ஸ்டைல்: pillowcoverili தான்.  out of fashion தொல்லை இல்லை. உலைக்கிக்கு பட்டு குஞ்சம்............. அட இது கூட நல்லாத்தான்  இருக்கு!

Solomonin comment: "உன்னால் இந்த சல்வாருக்கு அழகா? இல்லை, இந்த சல்வாரால் உனக்கு அழகா?"
இரண்டும் இல்லை, கண்ணா. இந்த சல்வாரால் தலையணைக்கு அழகு..................!!!!!!

Wednesday, October 28, 2009

திருமண photo

திருமண நாளில் தம்பதியை நிற்க வைத்து ஒரு போட்டோ எடுத்து பெரியதாய் enlarge பண்ணி நல்ல frame போட்டு ஹாலில் முக்கிய இடத்தில் மாட்டி வைத்தால் அருமையாக இருக்கிறது. எத்தனை ஆண்டுகளுக்கு என்பதுதான் கேள்வி.
அநேகமாக பொண்ணு அமைதி புன்னைகையிலும்  மாப்பிள்ளை அதிகார புன்சிரிப்பிலும் இருக்கும் போட்டோ அந்த photo ஒன்றாக தானிருக்கும்.   ஹா, ஹா, ஹா,.....


மனிதன் நாள்தோறும் குணத்தில் மனதில் மாறுகிறானோ என்னவோ ஆனால் உருவத்தில் மாறிக் கொண்டுதான் இருக்கிறான். அதற்கு இந்த photokkal சாட்சி. சிலர் இதற்கு விதி விலக்காக இருந்தாலும் பலருக்கு இதுதான் இயற்கையின் நியதி. சில சமயம் அந்த photovil உள்ளவர்களும் நாம் நேரில் பார்ப்பவர்களும் ஒரே ஆட்கள்தானா என்ற கேள்வியும் எழாமல் இல்லை.


நான்  சிவாஜியும் K.R.விஜயாவும் இணைந்து நடித்த சில  படங்கள் பார்த்து இருக்கிறேன். கே டி.வி. classic matinee எதற்கு இருக்கிறது?  அவர்கள் இருவரும் நடித்து வந்த படங்களில் என் all-time favorite movie, "திரிசூலம்" தான். அட ...அட.... என்ன ஒரு entertainment ..... movieyil இருவரும் முதலில் இளஞ்ஜோடி.  பின் 25 வருடங்கள் கழித்து பார்த்தால் அணிலை தடவி நன்றி தெரிவித்து விட்டு ராமர் K.R.விஜயாவின் தலையையும் தடவி நன்றி சொல்லியிருப்பார் போல. அணிலுக்கு முதுகில் விழுந்த கோடு மாதிரி இப்ப இவர் தலையில் வெள்ளை கோடு இருக்கும். அம்மாவுக்கு வயசு ஆச்சாம்.  ஐயாவுக்கு தாடி வந்து (disguiseil கதை படி இருக்கிறார்) அதே போல் சில வெள்ளை கோடுகள், யாரோ வெத்திலைக்கு சுண்ணாம்பு தடவிட்டு இவர் தலையில் இங்கே அங்கேன்னு விரலை தடவி துடைச்ச மாதிரி இருக்கும். இது ஐயாவுக்கு வயசு ஆச்சாம். மத்தப்படி ஒரு changeum குறுப்பிடும்படி இருக்காது. சிவாஜி character, Himalaya Hair loss creamai ஒரு வயதில் இருந்தே use பண்ணியிருக்கும் போல. ஒரு முடிகூட கொட்டி இருக்காது. விஜயா character, சுமதி, முதல் சீன் இருந்தே முதிர் கன்னியாக இருப்பாதல் இப்ப ஒண்ணும் மாறலை.


நான் என் கணவரை முதலில் பார்த்ததும் அவர் தலை முடியும் கண்களும் மூக்கும் என்னை மயக்கி கனவுலகில் டூயட் பாட வைத்தன. "காதலில் விழுந்தேன்" படத்தில் வரும் ஒரு பாட்டை போல, "உன் தலை முடி உதிர்வதை கூட தாங்க முடியாது அன்பே....." ஆனால் திருமண வாழ்க்கை என்னை இப்போ practical personaa மாத்திருக்கு. அப்படி பாடிக்கிட்டு இருந்தா இந்நேரம் நான் ரொம்ப தாங்க முடியாம ICU வில் அட்மிட் ஆகி அங்கிருந்துதான் "blog"க வேண்டும் - புலம்ப வேண்டும். இப்போ அவர் தலைமுடி புல்வெளி தரையில் உதய சூரியன் ஐய்க்கியமானது போல இருக்கும்போதும் என்னால் காதலிக்க முடிகிறது.


பெரும்பாலான ஆண்கள், "இரண்டு மனம் வேண்டும். இறைவனை கேட்பேன். கட்டிக்கிட்ட உருவத்தை மறக்க ஒன்று; இப்ப இருக்க உருவத்தை சகிக்க ஒன்று....." என்று மனதிக்குள் மனைவி குறித்து  பாடிக்கொண்டு இருக்கலாம். என் கணவரும்   "நீதானா அந்த குயில்???" என்று கேட்டு பாடும் அளவுக்கு நான் உருவத்தில் மாறி விட்டேன். முதலில், "உன் இடுப்பு மடிப்பில் என்னை மடிப்பாயா?" அப்புறம், "அப்படி மடிச்சிராத. மூச்சு முட்டி செத்துருவேன்."


அதுக்காக உனக்கும் கல்யாணம் ஆகி 25 வருடங்கள் ஆயிட்டா என்று கேக்காதிங்க. அதுக்கு முன்னாலேயே, ரெண்டு பிள்ளைகள் பெத்ததற்கே இந்த நிலைமை. அப்போ, இன்னும் எப்படியோ?


அந்த திருமண photo இப்ப நம்மை, "எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்" என்று புலம்ப வைக்க நடு வீட்டில் இல்லை. ஆனால் திருமண வாழ்வின் உன்னதத்தை சொல்ல இருக்கிறது. இரண்டு  strangers ஒன்று சேர அந்த உருவம்,  பருவம் தேவை பட்டது. ஆனால், இப்ப looks போன பிறகும் முன்பை விட அதிகம் விட்டு கொடுத்து இன்னும் நேசித்து சகித்து  சேர்ந்து வாழும்போது புது அர்த்தம் தருவதை அந்த photo நினைவுபடுத்துகிறது. "உன் அழகை மட்டும் இல்லை, அதிலும் ஆழமாய் உன்னை உனக்காக நேசிக்கிறேன்" என்கிறது. அப்படித்தான் என்று நான் நினைக்கிறேன்.  என் கணவர் வேறு விளக்கம் தரலாம்.


 Going back to the movie, "திரிசூலம்": "சுமதி, உன்னால் இந்த குங்குமத்திற்கு அழகா? இந்த குங்குமத்தால் உனக்கு அழகா?" என்று ஒரு classic வசனம் வரும். அதை வைத்து, " உன்னால் இந்த சல்வாருக்கு அழகா இந்த சல்வாரால் உனக்கு அழகா?" என்று இப்போது கலாய்க்கும் அளவுக்கு solomon வந்து விட்டார். 

Tuesday, October 27, 2009

திருநெல்வேலி அல்வா....halwa

கோயம்புத்தூர் குசும்பு....... மதுரை லந்து.......சென்னை லொள்ளு.......திருநெல்வேலி நக்கல்......

"என்னலே, மண்டை இடிக்கி. தைலம் தாவே."
"ஏ புள்ள, பசிக்கி. எப்ப சோத்தக் கண்ணுல காட்ட போறே?"
"மாப்பிள்ளை, என்ன இங்குட்டும் அங்குட்டும் லாந்திக்கிட்டு இருக்க. ஒரு இடத்தில இருந்தா என்ன?"
"தாயீ, வராட ஆழி மாதிரி. திம்சுகட்டை சும்மா திங்கு திங்கு னு ஆடும்."
"நான் வரது தெரியாம பஸ்சு வருதானு ஆன்னு பாத்துட்டு நிக்கா."

இந்த வட்டார பேச்சு நெல்லை கிராமங்களில் மட்டும் இல்லை, டவுன் பக்கத்திலும் சாதாரணமாக கேட்கலாம்.

பின்வருபவை எல்லாம் நான் எங்கள் சொந்தக்காரர்கள் வீட்டிலும் கடை தெருவிலும் நண்பர்கள் வீட்டிலும் பேருந்து நிலையங்களிலும் மற்ற இடங்களிலும் கேட்டு என் மனதில் இன்னும் நின்று அப்போ அப்போ வந்து கிச்சு கிச்சு மூட்டி என்னை சிரிக்க வைக்கும் நக்கல் பேச்சுக்கள்:

"ஏண்டா மாப்புள்ளை, மப்பும் மந்தாருமாய் ஒரு பொண்ணு போக கூடாதே. பின்னாலேயே போறீயே."
"டேய், அது என் மாமா பெண்ணுதான்லே. சும்மா கிடையும்."
"தாமிரபரணி ஆத்துல தண்ணி கரை நிறையா ஓடினாலும், நாய் நக்கிதான் குடிக்குமாம். அப்ப கைய புடிச்சு கூட்டிட்டு போறதை விட்டுட்டு ....."

"செவ்வாய் தோஷம் உள்ள என் பொண்ணுக்கு ஒரு வழியா அமஞ்சி வந்திட்டு. என்ன ஒண்ணு. மாப்பிள்ளை பையனுக்கு வயசு 39 ஆம்."
"அப்ப மாப்பிள்ளை பையன்னு சொல்லாதே. பையர்னு சொல்லு."

"எப்ப பாத்தாலும் தேடி வந்து அஞ்ச கொடு பத்தக் குடுன்னு படுத்துரீய."
"மொத்தமா ஏதாவது குடு. அப்ப நீ என்னை தேடி வந்து படுத்தாம இருக்கியான்னு பாக்கிறேன்."

"கல்லறைக்கு போறதுக்கு ஊர்வலம் ஆரம்பிச்சாச்சு."
"ஆமா, வண்டி ஏதாவது ஏற்பாடா? இல்ல நடந்துதான் எல்லோரும் வரணுமா?"
"போய் சேந்த சித்திக்கு மட்டும்தான் வண்டி. மத்தவங்களுக்கு நடராஜா service தான்."

"துவையல் ஏன் ரொம்ப குறைவா  இருக்கு?"
"கரண்ட் போயிட்டு. அம்மியில கொஞ்சமா அரைச்சேன்."
"இத்தனூண்டு அரைச்சிட்டு dining tableukku வேற வரணுமா? அம்மியிலேய இருக்கு. ரெண்டு இட்லியை அதிலே வைச்சே சாப்பிடுன்னு சொல்லாம விட்டியே."


"சொர்ணா மாமியாரையும் நாத்தனாரையும் ஏத்திக்கிட்டு ஆட்டோ எங்கே போகுது?"
"ஆட்டோ இப்ப எங்கே போகுதுன்னு தெரியாது. ஆனா இவங்க ஏறி இறங்கினா  நிச்சயமா பட்டறைக்கு (workshop) போகும்."


"ஏலே, சட்டப் பையிலே காசு கொஞ்சம் வச்சிக்கடா. உன் அத்தை பொண்ணு மூணு பேரும் கல்யாணத்தன்னைக்கு முதலிரவுக்கு போக விடாம மறிப்பாளுக. காசு கொடுத்தாதான் விடுவாளுக."
"சும்மா இரும்மா. நான் வேண்டான்னு சொன்னேனா? மூணையும் சேத்து கூட்டிட்டே  உள்ளே போயிறேன்."

"என்னலே, என்ன சாப்பாடுல போடுறே?"
"ஏழு வகை காய்கரியோட போடறேன்."
"ஒரு ஆடு வாங்க வக்கில்லை. காய் கூட கறின்னு வார்த்தையை சேர்த்ததும் கத்திரிக்காய்க்கும் முருங்கைக்காய்க்கும் நாலு காலும் வாலும் முளைக்கவா போகுது?"

Monday, October 26, 2009

நுணலும் தன் வாயால்....

அம்மா: "சித்ரா, ராணி டீச்செருக்கு குழந்தை புறந்திருக்காம். பாக்க என் கூட வர்றீயா?"

அம்மா: "சித்ரா, பக்கத்து வீட்டுக்கு, அக்காவின்  பேபி பாக்க வர்றீயா?"

"போமா, பேபி ன போரு. என்னை பார்த்து சிரிக்காது, விளையாடாது. சத்தம் போடாதே, பாப்பாவை தூக்காதே, அங்க இங்க ஓடாதே னு சொல்வீங்க......."

தப்பு..... தப்பு...... தப்பு....... சின்ன வயதில் அப்படி இப்படி சொல்லி போகாம இருந்தது தப்பு. பெரிய பொண்ணு ஆன பிறகும் பாப்பாவை தூக்கி வைத்து கொஞ்சினேன தவிர, அம்மா என்ன பேசுறாங்க, குழந்தையின் தாய் என்ன சொல்றாங்கன்னு கவனிக்காம விட்டது தப்பு ......

கல்யாண வாழ்க்கைக்கு தயார் படுத்தும்போது, "மாப்பிள்ளைய புரிஞ்சு நடந்துக்க....... மாமியாருக்கு புடிச்ச மாதிரி நடந்துக்க ......." என்றல்லாம் சொல்லி அனுப்புகிறவர்கள், "பக்கத்து வீட்டுக்காரிகிட்ட பாத்து நடந்துக்க...... எதுத்த வீட்டுக்காரிகிட்டே நல்லா பழகிக்க.... கல்யாண வீட்டில் இத பேசாத..... அத பேசு....." போன்ற social lifekku தேவையான 101 சொல்ல நினைப்பதில்லை. நான் அசடு என்பதால் அனுபவம்தான் கற்றுக் கொடுக்கிறது.

திருமணம் ஆனபின், இப்ப நான்  பெரிய மனுஷியாம். அம்மா மட்டுமோ மாமியார் மட்டுமோ விசேஷங்களுக்கு போனால் பத்தாதாம்.  நான் இப்ப தனி familyaam. குடும்ப attendance recordil எனக்கு இப்ப தனி entry. ration cardu தனி தனியா இருக்கிற மாதிரி. அதனால், நானும் தனியா ஆஜர் ஆகணுமாம். என்னாட இது மதுரைக்கு வந்த சோதனை மாதிரி.

என் தோழி, பிந்துவின் கையைப் பிடித்துக் கொண்டு, அஜிதாவின் குழந்தையை பாக்க போனேன். வழக்கம் போல் குழந்தையை பாத்தோமா கொஞ்சினோமா என்று இருந்தேன்.  "baby ரொம்ப cuteaa இருக்கு." என்றேன்.
அது பத்தாதாம்.

பிந்து என்னிடம், அஜிதாட்ட  எதாவது பேசு என்றாள்.  என்னத்த பேச........ ஆஹா, வார்த்தை வந்திருச்சு.... "அஜிதா, இப்ப பரவாயில்லயா?"  (wait a minute, hospital என்றதும் ஏதோ sick ஆன ஆள்ட்ட கேட்ட மாதிரி இருக்கே.) "அஜிதா, நல்லா ரெஸ்ட் எடுத்துக்கோங்க."
மனதுக்குள்: சுமார், சித்ரா. next time இன்னும் கொஞ்சம் home-work பண்ணிட்டு வரணும். படிக்கிற காலத்திலேயே ஒழுங்கா homework பண்ணல. இப்ப பண்ண வேண்டி இருக்கு.
என் மன எண்ணங்கள் தெரியாமல், அஜிதா கேள்வி என்ற பெயரில் ஒரு நாட்டு வெடி குண்டை எனக்குள் போட்டார்கள். "சித்ரா, குழந்தை யாரை மாதிரி இருக்கு?"
ஐயோ, ஐயோ, இது எனக்கு தேவையான கேள்வியா? எனக்கு என்னவோ எல்லா newborn babiesum ஒரே மாதிரித்தான் தோணும். மனம் தூங்கி கொண்டிருந்த மூளையை எழுப்பியது. மூளை பத்தாவது படிக்கும்போது சயின்ஸ் examskku ராப் பகலாய் படிச்சுட்டு தூங்கியது. இப்போ எழும்பி, இதுவும் biology questionnu  நினைச்சிருச்சி. கேள்விய உத்து உத்து பாத்தா மாதிரி (science கேள்வி தெரியும். பதிலும் கேள்விக்குள் தெரியுதான்னு  உத்து உத்து question paperai பாத்தா மாதிரி) இப்ப என் கையில் இருந்த babyai பார்த்தது. இங்கு copy அடிக்க பக்கத்தில் யாரும் பதில் வைத்திருக்கவில்லை.
அப்பொழுது பார்த்தா பாப்பாவின் light brown eyes என் கண்ணில் பட வேண்டும்?
"அஜிதா, உங்களுக்கு dark brown eyes. உங்கள் கணவரின் கண் நிறத்தை உத்து பாத்ததில்லை. அவருக்கும் light brown மாதிரி நினைவு இல்லை. பேபி அப்போ யார் மாதிரின்னு தெரியலையே?"
பிந்து என் முதுகில் ஏன் தட்டினாள் என்று சில வினாடிகளில் புரிந்து, என்னை நியாயப் படுத்திகொள்ளும் முயற்சியாக, "இல்ல, அஜிதா, babykku லைட் கலர் கண்களாக இருப்பதால், அப்படி சொல்லிட்டேன்.  உங்க வீட்டில் யாருக்கும் இந்த நிறம் நான் பாத்ததில்லை. உங்க husband வீட்டிலேயும்....." பிந்து என்னை பேசி முடிக்க விடவில்லை.
"சித்ரா, போதும். போதும். வாயை வச்சுக்கிட்டு சும்மா இருங்க."
அஜிதா என்னை பரிதாபமாக பார்த்தாள்.  ஓஹோ..... நாந்தான் இப்போ பரிதாபத்துக்கு உரியவளா?
எனக்கு இது வேணும், இன்னமும் வேணும்.......

குடும்பத்துக்குள் குழப்பங்கள் வர சகுனிகள் மட்டும் அல்ல என்னை மாதிரி அசடுகளும் காரணமாகி விடுகிறார்களோ?

இப்பொழுதெல்லாம் எனக்கு பிரச்சினை இல்லை. என்னால் மற்றவர்களுக்கும் இல்லை.
"baby cuteaa இருக்கு. அப்படியே அப்பா மாதிரி இருக்கு."
"இல்லையே சித்ரா. எல்லோரும் என்னை மாதிரி இருக்குன்னு சொல்றாங்க."
"அப்படியா. கண்ணும் வாயும் உங்கள மாதிரி வேணா இருக்கலாம். ஆனா மூக்கும் காதும் அப்படியே அப்பாதான்."
ஆத்தா............. நான், பத்தாங் கிளாஸ் பாஸ் ஆயிட்டேன்............!!!!!!!

Saturday, October 24, 2009

சிரிச்சு சிரிச்சு வந்தா......

"சிரிச்சு சிரிச்சு வந்தா சீனா தானா டோய்......."

ஆமாம், சீனா தானா ன்ன என்ன? "சிரிச்சு சிரிச்சு வந்தா சீக்கு தானா ஓடிபோயுடும் டோய்...." என்று இருக்குமோ? அது என்னவாகவும் இருந்துட்டு போகட்டும்.
என்னை வாய் விட்டு சிரிக்க வைத்த சிலரை நினைக்காமல் இருக்கமுடியவில்லை. எனக்கு நகைச்சுவை உணர்வை ஒரு கலையாக அறிமுகம் படுத்தி வைத்தது என் அப்பாதான். St.Xavier's schoolil கணக்கு வாத்தியார் திரு.பொ.ம.ராசமணியாக இருந்தாலும் அவரது நகைச்சுவைதான் அவரை பலருக்கு அடையாளம் காட்டியது.  முதன் முதலில் அவர் சொல்லி நான்  ரசித்து சிரிச்ச ஜோக் இன்னும் ஞாபகம் இருக்கிறது. சின்ன வயதில் எனக்கு ஏனோ அந்த ஜோக் அவ்வளவு பிடித்திருந்தது.

கோயிலில் இரண்டு கிழவர்கள் சந்திக்கிறார்கள்:
ஒருவர்: உனக்கு கோவில்பட்டியா?
அடுத்தவர்: இல்ல. எனக்கு கோவில்பட்டி.
முதலாமவர்: அப்படியா. நான் கோவில்பட்டியோனு நினைச்சேன்.

இதில்  சம்பந்தப்பட்டவர்கள் அல்ல இதை கேட்டுக் கொண்டிருந்தவர்களுக்குதான் இது  ஜோக். அவர்களுக்கு புரியாத புதிர். முதலாமவர் அடுத்தவர் எந்த ஊர்க்காரர் என்று நினைத்து இருப்பார் என்று புரிந்தும் புரியாமலும் ரொம்ப சிரித்தேன். ஜோக் என்றாலே புளி போட்டு முழுக்க விளக்கி சொல்ல தேவையில்லைதானே.

 நாங்கள் Texas இல் இருந்த வருடங்கள் மறக்க முடியாதவை. முதலில் அந்த ஊர் பேரைச் சொன்னாலே பலர் சிரிக்க ஆரம்பித்து விடுவீர்கள். "Lubbock" - லபக். சத்தியமா அதுதான் நாங்க Texasil இருந்த ஊர் பேரு.
"எங்க இருக்கீங்க?"
"ஒரு நிமிஷம், வாயில் இருக்கிறதா லபக்குனு முழிங்கிட்டு சொல்றேன். ஆஹ் ... லபக்."
"லபக் லபக்குனுக்றீங்க. மெல்ல சாப்பிட்டுட்டு சொல்லுங்க."
"அதான். லபக்."
"??????!!!!!!"

  விவேக் "லார்ட் லபக் தாஸ்னு" சொல்லும் போதெல்லாம் என் கணவருக்கு உள்ள பட்ட பெயர் விவேக்குக்கும்  தெரிஞ்சு போச்சான்னு இருக்கும். என் கணவர் அங்கு professor ஆக இருந்ததால், அந்த universityil படிக்க வந்த நம்மூர் மக்களின் நட்பு எனக்கு கிடைக்கும் வாய்ப்பு கிடைத்தது.
பல அனுபவ பாடங்களை லபக்கில்தான் கற்று கொண்டேன்:

"wrong time + wrong people = பிரச்சனைகள்.
"wrong time + right people = நம்பிக்கை.
"right time + wrong people = கவலைகள். (tragedy)
"right time + right people = சந்தோஷம். (comedy)

இதில் எனக்கு நிறைய equation # 4 apply ஆச்சு.
Real lifeil எனக்கு வடிவேலுகளையும் விவேக்குகளையும் கடவுள் நண்பர்களாக தந்து இருக்கிறார்.
அவர்களில் சிலரை உங்களுக்கும் அறிமுகம் செய்கிறேன்:

சாய் சுந்தர்:
எங்கள் தோழி தேனம்மாள் அவரை phoneil கூப்பிட்டப்ப, "சாய், நான் தேனா பேசறேன்" என்றதுக்கு,
"நீங்க தேனா பேசுங்க இல்ல பாலா பேசுங்க. ஆனால் யாருன்னு சொல்லிட்டு பேசுங்க!" என்றார்.
தன் கல்யாண photo ஆல்பத்தில் புது மனைவியுடன் பாபா ரஜினி மாதிரி "கதம் கதம்"னு தைரியமாக போஸ் கொடுத்து நின்றவர்.

விஸ்வநாதன்:
டப்பாங்குத்து ஆட்டத்தில் கலக்கு கலக்கி எதையுமே யதார்த்தம் என்ற பேரில் பேசி எங்களை சிரிக்க வைத்தவர். சமைக்கும் போது எதை கேட்டாலும், "தேவையான அளவு போடு" என்பார். "தேவையான அளவுன்னா எவ்வளுவு?"
"எனக்கு இது தேவையானு" திருப்பி கேட்பார்.  இப்போ Houston தமிழ் சங்கங்களில் மட்டுமல்ல மற்ற இடங்களிலும் comedy drama போட்டு கலக்கி கொண்டு இருக்கிறார்.

கார்த்திக்:
"தீபாவளிக்கு என்ன பிளான்?"
"கார்த்திக், எனக்கு christmas தான்."
"சித்ரா, உங்களை என்ன எனக்காக பூஜையா பண்ண சொல்றேன்.  தீபாவளி சாப்பாடு சமச்சி போடுங்கதான்னு சொல்றேன்." என்று என்னை தீபாவளி வருடா வருடம் கொண்டாட வைத்தவர்.

ராதாகிருஷ்ணன்:
அசத்தப் போவது யாருக்கு சூப்பர் candidate. எல்லா actors மாதிரி நடித்து காட்டி டான்ஸ் ஆடுவார். சிவாஜி, MGR, கமல், ரஜினி (அதில் 80s ரஜினி, 90s ரஜினி என்று), பாக்கியராஜ், விஜயகாந்த், T.ராஜேந்தர் இப்போ உள்ள ஹிட்ஸ் ஆன டப்பங்குத்து பாட்டுக்கு ஆடினா எப்படி இருக்கும் என்று அவர் செய்வதை பார்த்து வயிறு வலிக்க சிரித்து இருக்கிறேன்.

மற்றும் புபேஷ், அஜய், மது, தீபா, சித்தார்த், ராஜேஷ், ராஜ் மோகன் என்று பட்டியல் நீண்டாலும், மும்மூர்த்திகளான குமாரையும் திநேஷையும் ஆனந்தையும் மிஞ்ச முடியாது. அவர்களை பற்றி பின்னொரு நாளில் ..........

Friday, October 23, 2009

அதை ஏன் என்னை பாத்து கேட்டாங்க?

கரகாட்டக்காரன் படத்தில், ஒரு காட்சியில், கவுண்டமணி செந்திலை பாத்து மனது தாங்காமல், "அதை ஏண்டா என்னை பாத்து கேட்ட?" என்பார்.
உங்களுக்கு எப்படியோ எனக்கு சில தருணங்களில் சிலருடைய கேள்விகள் என்னை அப்படி கேக்க தூண்டியிருக்கு.
நான் அசடு என்பதாலோ என்னவோ சில "புத்திசாலிகள்" என்னிடம் ஏதும் யோசிக்காமல் ஒரு கேள்வி கேப்பாங்களே பாக்கணும்............
 நிஜமா இது எல்லாம் என்னிடம் கேட்கப்பட்ட கேள்விகள்:

Scene 1:
(ஒரு நம்ப முடியாத expression முகத்தில் வைத்துக்கொண்டு) "புத்திசாலி":
"சித்ரா, நீங்க அமெரிக்காவிலா இருக்கீங்க?"
அசடுவின் பதில்:  இல்ல இந்தியாவில் இருந்து கொண்டு வெயிட் போட்டதில் இப்ப அமெரிக்க வரைக்கும் விரிஞ்சுட்டேன்.

Scene 2:
"புத்திசாலி":  "சித்ரா, நீங்க உங்க deliverykku அப்புறம் இப்படி குண்டு ஆயிட்டீங்களா? இல்ல கல்யாணத்துக்கு முன்னால இருந்து இப்படித்தானா?"
அசடுவின் பதில்:  சாலமன் ஒரு குண்டு பொண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கணும்னு முன்னாலேயே நேந்துக்கிட்டார். என்னால திருநெல்வேலி ஒரு ஒன்னரை அடி பூமிக்குள்ள போய்ட்டதால மக்களை காப்பதலாமுன்னு என்னை கல்யாணம் பண்ணிக்கிட்டார்.

Scene 3:
"புத்திசாலி":  "உங்களை கட்டிக்கிட்டு சாலமன் முழிக்கிறார?"
அசடுவின் பதில் கேள்வி: என்னை ரவுடி ராக்கம்மா என்றீர்களா இல்லை solomonai பாத்தா கேனையன் மாதிரி தோணுதா? எப்படி பாத்தாலும் damaging ஆன கேள்வி.

Scene 4:
"புத்திசாலி": "சித்ரா, நீங்க தமிழை இன்னும் மறக்கலையா?"
அசடுவின் பதில் கேள்வி: நான் தமிழை மறக்கதான் அமெரிக்கா போனேன்னு யார் சொன்னா?

Scene 5:
"புத்திசாலி": அங்கே அமெரிக்காவில் எல்லாமே கம்ப்யூட்டர் தானாமே?
அசடுவின் பதில்: ஆமாம். ஏன் ரெண்டு புள்ளைகளுக்கும் அப்பாவ கூட இருக்கேனுச்சு. நாந்தான், solomone போதும்னுட்டேன்.

Scene 6:
"புத்திசாலி":  அங்கே ஒரே mechanical life ஆமே?"
அசடுவின் பதில்: ஒரு வருஷம் கழிச்சு நீங்க electrical or chemical கூட choose பண்ணிக்கலாம்.

Scene 7:
"புத்திசாலி": உங்களுக்கு வீட்டிலேயே  இருந்தா bore அடிக்காதா?
அசடுவின் பதில்: வெளியே வந்தா "சிலர்" பேச்சும் போர் அடிக்குது. என்ன செய்ய?

Scene 8:
"புத்திசாலி": நீங்க எப்படித்தான் முழு நேரமும் house-wife ஆ இருக்கீங்களோ?
அசடுவின் பதில்:  Solomon, part timekku வேற ஆள் பார்த்தார். ஒன்னும் சரியாய் அமையவில்லை.

கேள்வியும் பதிலும் இன்னும் தொடரும்.....................

அப்பா, இப்பவே கண்ணை கட்டுதே.....!!!

ஏதோ எனக்கிருந்த தமிழ் பிரியத்துல "பாரதியார் பாட்டு" topic இல் தமிழ் கொலை பற்றி blogg இட்டேன். கன்யாகுமரியில் 133 அடி திருவள்ளுவர் சிலை பக்கத்தில் எனக்கொரு 1 1/2 inch il  சிலை வைப்பாங்கன்னு எழுதவில்லை -
சித்ராவிற்கு அப்படி பேசுவது பிடிக்கலையாம் என்று எல்லோரும் உடனே மாறப் போகிறார்கள் என்றும் எழுதவில்லை -
இதுக்கு உடனே ஏதாவது செய்யணும் என்று Abbas  ஒரு உண்ணாவிரதம் இருக்க வேண்டும் என்றும் எழுதவில்லை -
ஏதோ தோணிச்சு எழுதினேன். அதுக்காக இப்படியொரு இ-மெயில் அனுப்பி எனக்கு மயக்கம் வர வைப்பாங்கன்னு நான் நினைக்கலை.
சென்னையில் பிறந்து வளர்ந்த ஒரு தமிழ் அன்பர் அனுப்பிய மெயில், அப்படியே உங்களுக்காக:

Chitra,
Great work and a good start..please provide translation in English (Out of touch in reading tamil) 

அதுல, எதுக்கு அந்த smiley face? ஐயோ, உஸ்ஸ்ஸ்....அப்பப்ப.... எனக்கு இப்பவே கண்ண கட்டுதே..........

பாரதியார் பாட்டு - டி.வி. விளம்பர தமிழில்......

எல்லா வேலையும் முடித்து விட்டு, கொஞ்சம் அக்கடான்னு சன் டிவி பாக்கலாம்முன்னு உக்கார்ந்தா, 90s இல் popularaa  இருந்த actor (act????or) Abbas, 2 bucketsai கையில் வச்சுகிட்டு என்னை பாத்து, "நீங்க உங்க toiletil என்ன செய்றீங்க?" னு கேட்கிறார். நான் காதில்  கேட்டது சரிதானா என்று என் மகள், செல்லத்திடமும் செக் செய்தேன். அவளும் Abbas அப்படிதான் கேட்டதாக சொன்னாள். Toiletil வேற என்ன செய்வாங்க? ஏன்  இந்த கேள்வி?  இவரை கனவு ஹீரோவாக ரசித்தவர்கள் முகம் எப்படி போயிருந்துக்கும் என்று பாக்க தோணியது. ஹ,ஹ,ஹ,....

அதன் பிறகு, இந்த advertisementsil வரும் தமிழ் கொலையை நான் கவனிக்க ஆரம்பித்தேன்.
இது கொலையே இல்லை வெறும் suicide தான் என்று,  தமிழ் போலீஸ் case file எ close பண்ணீட்டாங்கனு நினைக்கிறேன். யாரும் கண்டுக்கிட்ட மாதிரி தெரியலை:

"நோ, ஒளிஞ்சிருக்கும் பற்சிதைவு!"
"ஆக்குமே, சகல நோய்க்கும் complete stop."
"வளர்ந்தாங்க இரட்டிப்பு மடங்கு அதிகமா."

இதுதான் இனி future தமிழ் என்றால், எதிர் கால சந்ததியருக்காக நம் தமிழ் பொக்கிஷங்களை மாற்ற வேண்டி வருமே. எப்படியும் கலைஞர் அடுத்த projecta இதை கொண்டு வருவார். translation வேலைக்கு ட்ரை பண்றேன் நான் இப்ப. புரிஞ்சுக்கோங்க, எனக்குதான் அது. தமிழ் நெல்லை இல்ல; தமிழ் சென்னை இல்ல; தமிழ் கொங்கு இல்ல; தமிழ் மதுரை இல்ல; தமிழ் வியாபாரம் இது. தமிழர் வாயர் இளிச்ச. கோனார் உரை தமிழ் பண்ணுவார் என்ன? எல்லோரும் போவாங்க தமிழ் tuition. நுனி நாக்கு தமிழ் பேசும் டிவி தொகுப்பாளினிகள் teachers. Nameetha ஆவாங்க Principal. எழுதுவேன் பாரதியார் பாடல்களை நான் இப்படி:

தமிழ் language போல் அறிந்த யாம் language களில்
காணோம் எங்கும் sweetaa;

சொல்லும்போது red தமிழ் country என்று - பாயுது
காதினிலே honey வந்து .....

பாப்பா விளையாடு ஓடி -
பாப்பா ஆகாது ஓய்ந்திருக்க நீ!

கண்ணம்மா விழிச்சுடர் hot தான் -
sun ஆ? moon ஆ?

சொல்லுங்க இப்ப: எனக்குதான் வேலைனு! இப்ப தொடக்கத்தில் Abbas கேட்ட கேள்விக்கு பதில்: நாங்க என்ன செய்ரோமுன்னு ஒரு பக்கம் இருக்கட்டும். நீங்க தமிழை toiletil நாறடிக்க விட்டுட்டீங்க......

என் குற்றமா? உன் குற்றமா?

அமெரிக்கா என்றாலே மக்கள் என்னமோ அவுத்து போட்டுட்டு அம்மணமா ஓடிக்கிட்டு இருப்பாங்க என்று இன்னும் எத்தனை பேர் நினைக்கிறாங்க தெரியுமா? அமெரிக்கன் இப்படியான் அப்படியான் என்று சொல்றவங்க அவங்க fantasy  lifein நிறை வேறாத  ஆசைகளை பரப்புராங்க போல சில சமயம் தோணும். இது  சில இந்தியர்களுக்கு மட்டும் இல்லை, western country lifenaa ஆபாச முகம் கொண்டதுதான் என்கிற எல்லா நாட்டு மக்களுக்கும் பொருந்தும்.

சத்தியமா இந்த சம்பவம் Miami இல் வைத்து எனக்கு நடந்தது:

ஒரு டிசம்பர் மாதத்தில், Solomonukku  Surprise Christmas gift வாங்க எங்கள் நண்பர் பாலாவுடன் நான் ஷாப்பிங் mall  சென்றேன்.  Christmas time, அமெரிக்காவில் family portrait photos எடுப்பது ரொம்ப common. Miami இல் South American countries களான Cuba, Ecuador, Columbia போன்ற இடங்களில் இல் இருந்து செட்டில் ஆனவர்களும் அதிகம். ஒருவன் South American Accent Englishil பேசியபடி நாங்கள் mall உக்குள் வரவும்,  எங்கள் அருகே வந்து family portraits க்கு order புடிக்க  வந்தான். (உங்களுக்காக தமிழில்)

ஆர்டர் புடிக்கும் ஆள்:  சார், family portraits எடுக்க வாங்க.
பாலா (தன்னை மட்டும் என்று நினைத்து):  இன்னும் family ஆகலை.
ஆர்டர் புடிக்கும் ஆள்: (என்னையும் சுட்டி காட்டி): husband and wife ஆகவும் எடுக்கலாம்;
பாலா: அவங்க என் wife இல்ல.
ஆர்டர் புடிக்கும் ஆள்:  boyfriend girlfriend ஆனாலும் ஓகே.
பாலா: (சிறிது அதிர்ந்து): இது என் girlfriend இல்ல. என் friend's wife.
ஆர்டர் புடிக்கும் ஆள்: (பெரிய அதிர்ச்சியுடன் கண்ணை சிமிட்டியவாறு) : Oh man, anything is possible in America!!!!

இப்படிதான் இருக்கும் என்று ஒருத்தர் நினைத்து விட்டால் நாம் மேல மேல சொல்லும் செய்திகள் அவர்கள் பார்வையின் படியேதான் மெருகேறும். என்னால் அப்பொழுது சிரிப்பை அடக்க முடியலை. ஆனால் பாலாவின் முகத்தில் ஒரு சோகம். ஏதோ என்னவோ நு நினைக்காதீங்க. அவர் சொன்ன காரணம்:  இப்பதான் புரியுது. ஏன் என்னை, நான் mall உக்குள் வந்ததில் இருந்து, எந்த பொண்ணும் ஒரு தடவை கூட பாக்கலைனு யோசிச்சேன். இந்த மாதிரி எத்தனை பேர் நினைச்சாங்களோ? அவர் கவலை அவருக்கு.

Thursday, October 22, 2009

சமையல் கலை.....

ஆய கலைகள் 64. சரியா?  அதை மூச்சு விடாம சொல்ல முடிஞ்ச தமிழர் 64 பேராவது இருப்பாங்களா? என் இன்றைய topic அது இல்ல. அதனால் 64 கலைகளையும் சொல்ல முடியாத தமிழர்களை மன்னிச்சு விட்டுருவோம். சரி, உனக்கு தெரியுமான்னு கேக்கிறீங்களா? இருங்க ஒரு செகண்டில்  கூகுள் பண்ணிட்டு சொல்றேன். ....

எனக்கு தெரிஞ்ச கலைகளில், சமையல் கலையை ஓவியத்திற்கு ஒப்பிடலாம். அப்போ என் சமையல் பத்தி கேக்க தோணுதா?  நான் சமையலில் பிக்காசோ மாதிரி. இதுதான் right side, left side, upsidenu இல்லாம அவர் வரைவார். இதுதான் செட்டிநாடு சமையல், நெல்லை சமையல், கொங்கு நாட்டு சமையல் இல்லாம நான் சமைப்பேன்.
என் சமையலுக்கும் கொஞ்சம் fans உண்டு. அது அவங்க செய்த புண்ணியமா இல்ல பாவமானு தெரியலை.

 நான் வேற வழி இல்லாம சமைக்க வந்தவ. கல்யாணம் ஆன புதிதில்,  என் கணவருக்கு, தன்  மனைவி தினம் தோறும் ஒரு வகை variety rice செய்ராளேன்னு சந்தோசம். ஒரு நாள் புளிசாதம், ஒரு நாள் லெமன் சாதம், ஒரு நாள் தேங்காய் சாதம், ஒரு நாள் vegetarian biriyani என்று.
சில நாட்கள் கழித்து வெறும் வெள்ளை சாதமும் கடையில் வாங்கிய தயிரும்தான்.
கணவனின் concerned கேள்வி: இன்னைக்கு variety  ரைஸ் பண்ணலியா?
மனைவியின் casual பதில்: இல்ல, அம்மா வாங்கி கொடுத்த எல்லா readymix packetsum காலி ஆயிட்டு.
நீங்க எல்லாம் நிஜமாகவே சாலமன் முகத்தை  பாக்கணுமே..............ஹா, ஹா, ஹா, .....

  பசி பத்தும் செய்யும். என்னை சமைக்க வச்சது. அங்க இங்க கேட்டு, trial and error basis ல  ஒரு வழியா நல்லா சாப்பிடுகிற அளவுக்கு சமைக்க பழகினேன்.

என் நண்பர்கள்  மத்தியில் சிறந்த சமையலில்: அம்முவின் சொதி, கோமியின் வத்தல் குழம்பு, பிரேமா சித்தியின் மினி-இட்லிஸ், சுபாவின் (அனுஜா) மீன் வறுவல், விஷியின்  ரசம், ரவியின் தயிர் சாதம், தீபாவின் தட்டை, சாந்தா அண்ணியின் முறுக்கு, சாந்தியோட அம்மம்மாவின் புளியோதரை, பூரணியின் பருப்பு உசிலி, ரகுவின் கேசரின்னு பட்டியல் நீண்டு நாக்கில் எச்சில் ஊற வைக்கும்.
நல்ல சமையல் மட்டும் இல்லங்க, சமையல் என்கிற பேரில் அவலை நினைத்து உரலை இடிச்சு நம்மை research lab எலிகளா ஆக்கி ஒரு வழி பண்றவங்களையும் மறக்க முடியலை.  சீரியசா  எவ்வளவு முயற்சி பண்றேன் தெரியுமா?
தினேஷின் பிரியாணிலெஸ் ; கிருஷ்ணாவின் இழுப்பாத்தி (சப்பாத்தி என்ற போர்வையில்);  சீமாவின் கொழு கொழுமா (ராஜ்மாவாம்); சந்திப்பாவின் இனிப்பு உப்புமா (கேசரியாம்); ஷங்கரின் கோந்து கேக் (banana கேக் ஆம்); லதாவின் பருப்பு கழுவின தண்ணீர் (சாம்பார்தானு சத்தியம் பண்றாள்);  பாஸ்கியின்  முட்டை கோஸ் களி பேஸ்ட் (original டிஷ் என்னன்னு இன்னும் research பண்ணி முடியலை) பட்டியல் நீள்கிறது. .... so, இங்கே ஸ்டாப் பண்ணிக்கிறேன்.

எனக்கு சைவ சாப்பாடு செய்ய basics  கற்று கொடுத்த Dr.புவனேஷ்வரியும் அவங்க அம்மாவையும் என்னால் காய் கறிகள் உள்ள வரை மறக்க முடியாது. நான் சென்னை வரும்போது எல்லாம் ஒரு நீள வாழை இலையில் ஒரு டிஸ்கவரி சேனல் ஒன்றை  விவேக் உக்கு  கோவை  சரளா  காட்டின மாதிரி எனக்கு non-veg. விருந்து வைக்கும் தினேஷின் அம்மா சமையலை கடலில் மீன் உள்ள வரை மறக்க முடியாது.

முதல் பேச்சு......


It took me this long to understand the concept of blogging - to read a few on a regular basis - to be motivated by my dear friend, Ammu to start one and HERE I AM................
My husband, Solomon introduced me first to a blog. அவரு இன்னும் எப்படி என்னை சமாளிச்சுகிட்டு - சகிச்சிகிட்டு - இருக்காரு  என்பதுக்கே ஒரு தனி blog அவர் போடலாம். என்னை blogger ஆக்கும் அவரது முயற்சி, இதோ.......
asadu: What is a blog?
aasaan: அது ஒருத்தரோட diary மாதிரி. 
asadu: அடுத்த ஆள் diary  படிக்கிறது தப்பாச்சே. 
aasaan: no, no, no. இது தப்பு இல்ல. எல்லோரும் படிக்கலாம்.
asadu: You mean, அடுத்த ஆள் படிக்கிறதுக்காக எழுதுகிற diary?
Cool! இந்த concept  நல்லா இருக்கே. 
aasaan: You can also write your opinions, share your advice and experiences and more.
asadu: ஆனா திருட்டு தனமா படிக்கிற த்ரில் இதுல்ல இருக்குமா?
aasaan: நீ திருட்டு தனமா படிச்சத கூட எழுதலாம்.
asadu: ஒரு வம்பை, ஊர் வம்பாக்கி, உலக வம்பாக்குவது. super!


So, my dear friends, இந்த முதல் பேச்சில் என்ன சொல்ல வரேன்னா, இப்படி அப்படியா, நானும் ஏதோ எழுத ட்ரை பண்றேன். எப்படி போகுதுன்னு பாப்போம். எங்க வடிவேலு pinchline மாதிரி  (heroeskku punchline - comedianskku pinchline - நம்மை கடிக்கீறாங்க பாருங்க): "ஆரம்பம் நல்லாத்தான் இருக்கு; ஆனால் finishing சரியில்லயே" என்று ஆகாமல் இருந்தா சரி.